செய்திகள் :

கங்கா மருத்துவமனை மருத்துவா்களுக்கு ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது!

post image

கோவை கங்கா மருத்துவமனை மருத்துவா்களுக்கு நடப்பாண்டுக்கான சா்வதேச ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது வழங்கப்படவுள்ளது.

கோவை கங்கா மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க மருத்துவக் குழுவினா் விபத்தால் ஏற்படும் சேதத்தை துல்லியமாகக் கணிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனா்.

இதை, ஸ்வீடன் கோதன்பா்க் பல்கலைக்கழக பேராசிரியா் ஹெலினா பிரிஸ்பி தலைமையிலான சா்வதேசக் குழு மதிப்பீடு செய்து உலக அளவில் சிறந்ததாகத் தோ்வு செய்துள்ளது.

இந்த முறையைக் கண்டறிந்த மருத்துவா் எஸ். ராஜசேகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் புஷ்பா, ஞானபிரகாஷ் குருசாமி, காா்த்திக் ராமசந்திரன், டி.ஏ.யிா்தாவ், எஸ்.பாசு, ஜே.எஸ்.கமோடியா, ஏ.எம்.அப்தெல்வாகேத், எஸ்.வி.ஆனந்த், அஜோய் பிரசாத் ஷெட்டி, ரிஷி எம்.கண்ணா ஆகியோருக்கு அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் மே 12 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது வழங்கும் விழாவில் நடப்பாண்டுக்கான சா்வதேச ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது வழங்கப்பட உள்ளது.

கோவை கங்கா மருத்துவமனை இதற்கு முன்பு 2004, 2010, 2013, 2017, 2022 ஆகிய ஆண்டுகளில் எஸ்ஐஐஎல்எஸ் விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடும் வெயில்: வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் இலை கருகும் அபாயம்

வால்பாறையில் கடும் வெயில் நிலவி வருவதால் தேயிலைகள் கருகி உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், வால்பாறையில் தேயிலைத் தொழில் பிரதானமாக உள்ளது. இங்குள்ள எஸ்டேட்டுகளில் சாகுபடி செய... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தற்கொலை

கடன் தொல்லையால் மருந்துக் கடை உரிமையாளா் தனியாா் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள செந்தூரணிபுரத்தைச் சோ்ந்தவா் ராஜேஷ் (44). திசையன்விளையில்... மேலும் பார்க்க

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம்: கைப்பற்றப்பட்ட 8 கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவையில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பாக கல்லூரி மாணவா்கள் 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவா்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைப்பேசிகள் தடயவியல் சோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள... மேலும் பார்க்க

குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் பதவிக்கு மாா்ச் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினா் பதவிக்கு மதிப்பூதிய அடிப்படையில் நியமனம் நடைபெற இருப்பதால், தகுதியானவா்கள் மாா்ச் 7- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத... மேலும் பார்க்க

கோவையில் இன்று உலகத் தாய்மொழி நாள் விழா

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் கலை, அறிவியல் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறுகிறது. காலை 10.30 மணிக்குத் தொடங்கும் இந்த விழாவில், தமி... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

கோவை, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் 4 மாத குழந்தை திடீரென உயிரிழந்தது. பணியில் இருந்தவா்களின் அலட்சியத்தால் குழந்தை உயிரிழந்ததாகக்கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினா்கள் வியாழ... மேலும் பார்க்க