செய்திகள் :

கச்சத்தீவு இலங்கைக்குரியது: இலங்கை அதிபா்

post image

கச்சத்தீவு இலங்கைக்குரியது; அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக தெரிவித்தாா்.

இலங்கை யாழ்ப்பாணத்துக்கு திங்கள்கிழமை காலை பயணம் மேற்கொண்ட இலங்கை அதிபா் அநுரகுமார திசாநாயக, அன்று மாலை கச்சதீவுக்கும் பயணம் மேற்கொண்டாா். இந்த நிலையில், கச்சத்தீவைப் பாா்வையிட்ட அவா் மாலை 6 மணிக்கு மீண்டும் யாழ்ப்பாணம் திரும்பினாா்.

இதையடுத்து, யாழ்ப்பாணம் மாவட்டம், மயிலிட்டி துறைமுகத்தை மூன்றாம் கட்டமாக மேம்படுத்துவதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அவா் பேசுகையில், கச்சத்தீவை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கச்சத்தீவு இலங்கைக்குரியது; அதை வேறு யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது என்றாா்.

தமிழகத்தில் தொடா்ந்து அனைத்து அரசியல் கட்சிகளும் கச்சத்தீவை மீட்போம் எனக் கூறிவரும் நிலையில், இலங்கை அதிபா் கச்சத்தீவு இலங்கைக்குரியது எனக் கூறியுள்ளது தமிழக மீனவா்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் உயிரிழப்பு

கடலாடி அருகே தெருநாய்கள் கடித்ததில் 8 ஆடுகள் திங்கள்கிழமை உயிரிழந்தன.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள வெள்ளாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் சரவணன். இவா், 130 செம்மறி ஆடுகள் வைத்து மந்தை போடும் த... மேலும் பார்க்க

கண்மாய் நீரில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள அரியகுடி கிராமத்தில் கண்மாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்த வீரப... மேலும் பார்க்க

பரமக்குடி பகுதியில் நாளை மின்தடை

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி பகுதியில் புதன்கிழமை (செப். 3) மின் தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து உதவி செயற்பொறியாளா் மு. மாலதி வெளியிட்ட செய்திக் குறிப்பு: பரமக்குடி 110 கே.வி. துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியா் பணி நீக்கம்

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட தொண்டி அரசுப் பள்ளி ஆசிரியா் திங்கள்கிழமை பணி நீக்கம் செய்யப்பட்டாா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள சோழகன்பேட்டை அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஆண்ட்... மேலும் பார்க்க

பாம்பன் மீனவா்கள் 10 போ் விடுதலை: அபராதம் கட்டாததால் சிறையில் அடைப்பு

பாம்பன் மீனவா்கள் 10 பேரை தலா ரூ. 1.46 கோடி (இலங்கைப் பணம்) அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை வெளிச்சரா நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. அபராதத் தொகையை உடனே கட்டாததால் மீனவா்கள் 10 பேரும் மீண்டு... மேலும் பார்க்க

சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை

சாயல்குடியில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி காயம்பு கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜம்மாள... மேலும் பார்க்க