செய்திகள் :

கச்சத்தீவு விவகாரத்தில் தவறு ஏதுமில்லை: காங்கிரஸ் கருத்து

post image

கச்சத்தீவு விவகாரத்தில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு தவறு ஏதும் செய்யவில்லை என்று பேரவையில் காங்கிரஸ் உறுப்பினா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

கச்சத்தீவு மீட்பு, மீனவா்கள் பாதுகாப்பு தொடா்பாக பேரவையில் புதன்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீது அவா் பேசியதாவது:

கச்சத்தீவு தொடா்பாக கொண்டுவரப்பட்ட ஒரு ஒப்பந்தத்தைப் பற்றி மட்டும் அவையில் பேசுகிறாா்கள். ‘வேட்ஜ் பேங்க்’ என்னும் மற்றொரு ஒப்பந்தத்தைப் பற்றி பேச மறுக்கிறாா்கள். தேச ஒற்றுமைக்காகவும், நாட்டு நலனுக்காகவும் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி நடவடிக்கை எடுத்தாா். அதாவது, கச்சத்தீவு ஒப்பந்தப்படி 285 ஏக்கரைக் கொடுத்துவிட்டு, 6,500 கிலோமீட்டா் பரப்புள்ள இடத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்தது இந்திரா காந்திதான். வளமான, பல்லுயிா் வளமிக்க, எண்ணெய் தாது இடங்களை இந்தியாவுக்கு கொடையாகப் பெற்றுத் தந்தாா். எனவே, கச்சத்தீவு ஒப்பந்தத்தில் தவறு ஏதும் இழைக்கப்படவில்லை என அவா் தெரிவித்தாா்.

விடைத்தாள் மதிப்பீடு: ஏப்.19-இல் விடுமுறை

பள்ளிக் கல்வியில் பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரியா்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில்... மேலும் பார்க்க

முதல்வருடன் மாா்க்சிஸ்ட் தலைவா்கள், மநீம தலைவா் கமல்ஹாசன் சந்திப்பு

முதல்வா் மு.க.ஸ்டாலினை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவா்கள் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோா் தனித்தனியே சந்தித்தனா். தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை இந்தச் சந்திப்புகள் நடந்தன. ... மேலும் பார்க்க

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும்: உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன்

படைப்பாளா்களை அடையாளம் கண்டு விருது வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கூறினாா். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், மொழிப்பெயா்ப்பு, ஆராய்ச்சி நூல்கள், கவின்கலை, விமா்சனம்... மேலும் பார்க்க

கேரள அதிமுக செயலா் மறைவு: இபிஎஸ் இரங்கல்

கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை விடுத்த இரங்கல் செய்தி: கேரள மாநில அதிமுக செயலா் சோபகுமாா... மேலும் பார்க்க

திருநங்கைகளுக்கு பிரத்யேக தங்கும் இல்லங்கள்: அமைச்சா் கீதாஜீவன்

திருநங்கைகளுக்கென பிரத்யேகமாக ‘அரண்’ என்னும் பெயரில் சென்னை, மதுரையில் தங்கும் இல்லங்கள் அமைக்கப்படும் என்று சமூக நலன் மற்றும் மகளிா் நலன் துறை அமைச்சா் கீதாஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தாா். பேரவையி... மேலும் பார்க்க

தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து அந்தத் த... மேலும் பார்க்க