செய்திகள் :

கரூர்: மதுபோதையில் தகராறு; சித்திரவதை தாங்காமல் கட்டையால் அடித்த மனைவி, கணவன் மரணம்..

post image

கரூர், ராயனூர் தில்லைநகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவர், கூலி தொழிலாளியாக இருந்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. கடந்த ஓராண்டிற்கு முன்பு இவர்களின் மகன் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்துவிட்டார்.

இந்நிலையில், சந்திரசேகருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. அடிக்கடி மது அருந்திவிட்டு வருவாராம். அதோடு, தனது மனைவியோடு தகராறில் ஈடுபட்டு வருவாராம். அப்படி, குடிபோதையில் இருந்த சந்திரசேகர் மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, சந்திரசேகருக்கும், சரண்யாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உண்டானதாக சொல்லப்படுகிறது.

குடி குடியைக் கெடுக்கும்!

இதனால் ஒருகட்டத்தில் சித்திரவதை தாங்காமல் ஆத்திரமடைந்த சரண்யா வீட்டில் கிடந்த கட்டையால் சந்திரசேகரின் பின்தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்து மயங்கி விழுந்தார்.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில், காலை சந்திரசேகர் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்தார்.

இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்திரசேகரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த கொலை குறித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப்பதிந்து சரண்யாவை கைது செய்தனர்.

`மதுபோதையில் நடக்கும் தகராறு சம்பவங்கள், மரணங்கள் அதிகரிப்பதால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது' என சமூக ஆர்வலர்கள் மிகுந்த வேதனையுடன் கூறுகின்றனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட மாணவி; நடந்தது என்ன?

கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் கருநாகப்பள்ளியை அடுத்த குறுப்பந்தறவு பகுதியில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்று செயல்பட்டுவந்தது.அந்த கல்வி நிறுவனத்தைக் கோட்டயம் மதுரவேலி பகுதியைச் சேர்ந்த சி.டி.ஜோமோ... மேலும் பார்க்க

பேத்தி மரணத்தில் சந்தேகம்; நடவடிக்கை எடுக்காத போலீஸ்; கலெக்டர் அலுவலகத்தில் புகாரை ஒட்டிய பெரியவர்!

மதுரை பந்தல்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாயழகன். இவரது பேத்தி ரம்யா கிருஷ்ணன், ரீபன் என்பவரைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி வீட்டில் நடந்த வாக்கு... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக ரூ.75 லட்சம் மோசடி; அரசு ஊழியர் சிறைக்குச் சென்ற பின்னணி!

அரக்கோணத்தைச் சேர்ந்த விஜி என்பவர், தொலைதூர தொடர்பு கல்வி மையத்தை நடத்தி வருகிறார். இவரின் கல்வி மையத்துக்கு சென்னை திருநீர்மலை பகுதியில் குடியிருக்கும் செல்வராஜ் என்பவர் கிளாஸ் எடுக்க சென்றிருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: இன்ஸ்டா பழக்கம்; ஆன்லைன் நண்பரைச் சந்திக்கச் சென்ற மாணவனுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

சென்னை ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய மாணவன், குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அந்தப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவனுக்கு இன்ஸ்ட்ராகிராம் மூலம் அமீன் எ... மேலும் பார்க்க

`ரயில்வே போலீஸுக்கு வேலை செஞ்சவன், இன்னைக்கு `ஏ’ கேட்டகிரி ரௌடி’ - காட்பாடி அலெக்ஸின் க்ரைம் ஹிஸ்டரி

வேலூர் மாவட்டம், காட்பாடியைச் சேர்ந்த பிரபல ரௌடி அலெக்ஸ். வழிப்பறிக் கொள்ளை, கொலை என 38 குற்ற வழக்குகளில் தொடர்புடைய அலெக்ஸ் `ஏ’ கேட்டகிரி ரௌடியாக வலம் வந்துகொண்டிருக்கிறான். கடந்த 12-10-2016 -லிருந்த... மேலும் பார்க்க

Mollywood: ``போதையில் தவறாக நடந்தார்..'' - நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது நடிகை வின்சி அலோஷியஸ் புகார்

பிரபல மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மீது மலையாள நடிகை வின்சி அலோஷியஸ் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்திருக்கிறார். நடிகர் ஷைன் டாம் சாக்கோ, வின்சி அலோஷியஸ், தீபக் பரம்போல், ஸ்ரீகாந்த் கண்டரகுலா ஆ... மேலும் பார்க்க