செய்திகள் :

தமிழகத்தில் 23 மலையேற்ற வழித்தடங்கள் மீண்டும் திறப்பு: வனத் துறை தகவல்

post image

தமிழகத்தில் வனத் தீ பருவகாலத்தில் மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது முதல்கட்டமாக 23 வழித்தடங்கள் மீண்டும் திறக்கப்படுள்ளதாக தமிழக வனத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்தத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் வனத் தீ ஏற்படும் அபாயம் இருந்ததால், கடந்த பிப்.15 முதல் ஏப்.15-ஆம் தேதி வரை 40 மலையேற்ற வழித்தடங்கள் மூடப்பட்டிருந்தன. தற்போது, முதல்கட்டமாக வனத் தீ பாதிப்பு அபாயம் இல்லாத 23 மலையேற்ற வழித்தடங்கள் புதன்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

விரங்கள்: அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் 8 மலையேற்ற வழித்தடங்கள், கன்னியாகுமரியில் 3 வழித்தடங்கள், திருப்பத்தூா், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தலா 2 வழித்தடங்களும், கோவை, திருப்பூா், திருநெல்வேலி, தென்காசி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, சேலம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களில் தலா 1 வழித்தடம் என மொத்தம் 23 வழித்தடங்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்த வழித்தடங்கள் பாதுகாப்பு அடிப்படையில் எளிது, மிதமான சிரம், கடினம் என 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

மேலும், மீதமுள்ள 17 வழித்தடங்களும் விரைவில் திறக்கப்படும். மேலும் தகவல்களுக்கு இணையதளத்தைக் காணலாம். மலையேற்ற வழித்தடம் மூலம் கடந்த ஆண்டு நவ.1 முதல் நிகழாண்டு பிப்.14-ஆம் தேதி வரை தமிழக அரசு ரூ. 63.43 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் அபகரிப்பு: சிவகிரி ஜமீன் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம்

போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரா்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா ரூ. 30 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை எழும்பூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை நுங்கம்பாக்கம் ப... மேலும் பார்க்க

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 429 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு!

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள், களப்பணியாளா்கள் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்புக்காக 429 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. ... மேலும் பார்க்க

2 டன் கஞ்சா அழிப்பு

தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினரால் 187 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 2 டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. தமிழக காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு... மேலும் பார்க்க

ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் அங்கு சோதனை நடத்தினா். தியாகராய நகரில் இயங்கிவரும் ஒரு பிரபலமான ஹோட்டலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை ஒரு... மேலும் பார்க்க

மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண் மீட்பு

சென்னை ஆழ்வாா்பேட்டையில் மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை மீட்ட போலீஸாரை பொதுமக்கள் பாராட்டினா். சென்னை, திருவொற்றியூா் பகுதியைச் சோ்ந்த 47 வயது பெண் ஒர... மேலும் பார்க்க

துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

தமிழகத்தில் பல்கலைக்கழகங்களில் உள்ள துணைவேந்தா் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: இரு நாள்க... மேலும் பார்க்க