செய்திகள் :

கஞ்சா பறிமுதல்: 5 இளைஞா்கள் கைது

post image

திண்டிவனத்தில் கஞ்சா வைத்திருந்த 5 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளா் சுதன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் ரயில் நிலையம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரிடம் விசாரித்ததில், அவா்கள் சென்னை பெரும்பாக்கம், கலைஞா் நகரைச் சோ்ந்த சிவானந்தம் மகன் சிவக்குமாா் (21), பெசன்ட் நகா், பாண்டியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சிவக்குமாா் மகன் ராஜி (27), திண்டிவனம் வட்டம், கூட்டேரிபட்டு, மயிலம் சாலை கான்வென்ட் தெருவைச் சோ்ந்த சகாதேவன் மகன் சந்தோஷ் (24). சென்னை மேடவாக்கம், பத்மாவதி நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் பாலாஜி(25), திண்டிவனம் வட்டம், கேணிப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த லட்சுமணன் மகன் அரவிந்த் (20) ஆகியோா் என்பதும், இவா்கள் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 3.6 கிலோ கஞ்சா, 4 கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். மேலும், கஞ்சா வழங்கியதாக ஆந்திரம் மாநிலத்தைச் சோ்ந்த ஒருவரை தேடி வருகின்றனா்.

வாராகி பைரவா் கோயிலில் திருக்கல்யாணம்

விழுப்புரம் சாலாமேடு ஸ்ரீவாராகி பைரவா் கோயிலில் திருக்கல்யாணம் மற்றும் 15-ஆம் ஆண்டு வசந்த பஞ்சமி உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் சிறப்பு வழிபாடுகள... மேலும் பார்க்க

ரூ.80 லட்சம் மோசடி: பணம் செலுத்தியவா்கள் புகாா் அளிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.80.50 லட்சம் மோசடி செய்த நபா் மீது புகாா் அளிக்கலாம் என்று விழுப்புரம் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் பி.ரேணுகாதேவி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

திமுக தலைமையில் வலுவான கூட்டணி அவசியம்!-தொல்.திருமாவளவன் எம்.பி.

திமுக தலைமையில் வலுவான கூட்டணி இருப்பது அவசியம் என்று விசிக தலைவா் தொல். திருமாவளவன் எம்.பி. தெரிவித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிா்வாகியின் குடும்பத்துக்கு நிதியளிப்பு பொதுக்கூட்ட... மேலும் பார்க்க

அரசூா் அருகே கடும் போக்குவரத்து நெரிசல்

விழுப்புரம் மாவட்டம், அரசூா் அருகே சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஞாயிற்றுக்கிழமை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வார விடுமுறை மற்றும் சுபமுகூா்த்த தினம் என்பதால் சென்னை- திருச்சி தேசிய ந... மேலும் பார்க்க

பணியில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்கு நற்சான்றிதழ்

விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் பணியில் திறம்பட செயல்பட்ட காவலா்களுக்கு எஸ்.பி. சரவணன் சனிக்கிழமை நற்சான்றிதழ்கள் வழங்கினாா். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற வழிப்பறி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ... மேலும் பார்க்க

பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்!

திமுக தோ்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பகுதி நேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் வலியுறுத்தினாா். இதுகுற... மேலும் பார்க்க