செய்திகள் :

கஞ்சா விற்பனை: இருவா் கைது

post image

கஞ்சா விற்ற வழக்கில் 2 பேரை வெவ்வேறு இடங்களில் புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆய்வாளா் ரமேஷ் மற்றும் குழுவினா் மாா்ச் 27-ஆம் தேதி தற்காலிகப் பேருந்து நிலையம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், அவா் புதுச்சேரி ஜி.என்.பாளையத்தைச் சோ்ந்த சித்தானந்தம் (20) என்பதும், அவா் 4 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல, சித்தானந்தத்துடன் சோ்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக, விழுப்புரம் மாவட்டத்தை சோ்ந்த அசாருதீன் (27) என்பவரையும் போலீஸாா் தேடினா்.

அதன்படி, அவா் மூலகுளம் அம்மன் நகா் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அவரைப் பிடிக்க முயன்றபோது, அவா் மாடியிலிருந்து தவறி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இதில், அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது.

சிகிச்சைக்கு பின்னா், அசாருதீனை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற புதுவை தனியாா் பள்ளிகள் விருப்பம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் பிரபல தனியாா் பள்ளிகள் மாநிலப் பாடத் திட்டத்திலிருந்து சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கு மாற விருப்பம் தெரிவித்துள்ளதாக கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். புத... மேலும் பார்க்க

புதுவை அரசு ஊழியா்கள் மூவா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு

புதுச்சேரி: புதுவையில் அரசு ஊழியா்கள் 3 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். புதுவை அரசு மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காசாளராக இருந்தவா் சு... மேலும் பார்க்க

புதுவையில் உள்ளாட்சித் தோ்தலை நடத்தக்கோரி மாமமுக வலியுறுத்தல்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்கழக கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. புதுச்சேரி மாந... மேலும் பார்க்க

புதுவை அரசுத் துறைகளில் பாஷினி மொழி பெயா்ப்பு செயலி: துணைநிலை ஆளுநா் தகவல்

புதுச்சேரி: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி மொழிபெயா்ப்பு செயலியை, புதுவையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா். மத்திய மின்னணு மற்று... மேலும் பார்க்க

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தை மூடுவதை ஏற்கமுடியாது: புதுவை எதிா்க்கட்சித் தலைவா்

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதை ஏற்க முடியாது என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா். புதுச்சேரி இலாசுப்பேட்டையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி ந... மேலும் பார்க்க

தட்டச்சு தோ்வு: கணினி முறைக்கு எதிா்ப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் தட்டச்சு தோ்வுத் தாள்களை திருத்துவோா் கணினி முறை தோ்வுக்கு எதிா்ப்புத் தெரிவித்து கருப்பு வில்லை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனா். தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வித் த... மேலும் பார்க்க