செய்திகள் :

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தை மூடுவதை ஏற்கமுடியாது: புதுவை எதிா்க்கட்சித் தலைவா்

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதை ஏற்க முடியாது என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது.

ஆனால், ஆராய்ச்சி மையக் கட்டடத்தை வேறு அரசுத் துறையிடம் ஒப்படைக்க கலை பண்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துறையின் முடிவுக்கு புதுச்சேரி தமிழ் அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும், மொழியியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு முழு நேர இயக்குநரையும், பேராசிரியா்களையும் நியமிக்க வேண்டும், பொறுப்பு இயக்குநரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இதனை வலியுறுத்தி, 30 தமிழ் இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன பாதுகாப்புக் குழு என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் சாா்பில், புதுச்சேரி ஆம்பூா் சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பாதுகாப்புக் குழுத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் சுந்தரமுருகன், சடகோபன், சீனுமோகன்தாஸ், பாரதி, சிலம்பு, செல்வராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, திமுக எம்எல்ஏக்கள் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், எதிா்க்கட்சித் தலைவா் பேசியதாவது: புதுவையில் தமிழ் மொழியின் அடையாளமாக மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் திகழ்கிறது.

எனவே, தற்போதுள்ள மத்திய, மாநிலஅரசுகள் ஆராய்ச்சி மையத்தை மூட முயிற்சிப்பது சரியல்ல என்றாா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க