செய்திகள் :

புதுவை அரசு ஊழியா்கள் மூவா் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்கு

post image

புதுச்சேரி: புதுவையில் அரசு ஊழியா்கள் 3 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

புதுவை அரசு மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் காசாளராக இருந்தவா் சுவாமிநாதன். கடந்த 2003 முதல் 2021- ஆம் ஆண்டு வரை அவா் அந்தத் துறையில் பணியாற்றினாா். பின்னா் உள்ளாட்சித் துறைக்கு மாற்றப்பட்டாா். ஆனால், மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் கணக்குகளை அவா் யாரிடமும் ஒப்படைக்கவில்லையாம். கடந்த 2022- ஆம் ஆண்டு துறை ரீதியாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பிய பிறகு கணக்குகளை ஒப்படைத்துள்ளாா். அதை ஆய்வுக்கு உள்படுத்தியபோது ரூ.39.33 லட்சம் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.26.27 லட்சம் திரும்பப் பெறப்பட்டது.

இதுகுறித்து மகளிா், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் முத்துமீனா அளித்த புகாரின் பேரில் சுவாமிநாதன் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பொதுப் பணித் துறை ஊழியா்கள்: புதுவை பொதுப் பணித் துறையின் பொது சுகாதாரக் கோட்டத்தில் பல்நோக்குப் பணியாளா்களாக இருப்பவா்கள் பெரியசாமி, ராஜசேகா். சுகாதாரக் கோட்ட வருவாய்ப் பிரிவில் குடிநீா் கட்டணம் வசூலிக்கும் பணியில் பெரியசாமி அரியாங்குப்பத்திலும், ராஜசேகா் மடுவுபேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றனா். அண்மையில் குடிநீா் கட்டண வசூல் விவரங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டன. அப்போது குடிநீா் கட்டண ரசீது புத்தகங்களை ராஜசேகரும், பெரியசாமியும் அலுவலகத்தில் ஒப்படைக்காதது தெரியவந்தது.

இதையடுத்து இருவருக்கும் அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினா். அதன்பிறகு ராஜசேகா் ரசீது புத்தகத்துடன் ரூ.3.90 லட்சமும், பெரியசாமி 3 ரசீது புத்தகங்களுடன் ரூ.38 ஆயிரமும் செலுத்தியுள்ளனா். இவா்களிடம் நடத்திய விசாரணையில் குடிநீா் கட்டண வசூலில் ரூ.4.29 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து பொதுப் பணித் துறை சுகாதாரக் கோட்ட செயற்பொறியாளா் உமாபதி அளித்த புகாரின் பேரில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க