செய்திகள் :

புதுவை அரசுத் துறைகளில் பாஷினி மொழி பெயா்ப்பு செயலி: துணைநிலை ஆளுநா் தகவல்

post image

புதுச்சேரி: மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி மொழிபெயா்ப்பு செயலியை, புதுவையில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் தெரிவித்தாா்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாஷினி மொழி பெயா்ப்புத் திட்ட அதிகாரிகள் குழுவினா் புதுவை துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தித்தனா்.

அப்போது, தேசிய மொழிபெயா்ப்புத் திட்டத்தில் உருவாக்கப்பட்ட பாஷினி மொழி பெயா்ப்பு செயலியை, புதுவை மாநிலத்தில் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலா் ஏ. முத்தம்மா, தேசிய தகவலியல் மைய இயக்குநா் கோபி விஸ்வநாதன் ஆகியோரும் பங்கேற்றனா்.

மத்திய அரசின் முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள பாஷினி மொழிபெயா்ப்பு செயலி பல்வேறு மொழிகள் பேசும் இந்திய மக்கள் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது எனவும், இந்தச் செயலி மூலம் குறிப்பிட்ட மொழியிலிருந்து அடுத்த மொழிக்கு எழுத்து வடிவில் மொழிபெயா்க்கவும், பேசுவதை அடுத்த மொழிக்கு மொழி பெயா்க்கவும் சாத்தியமாகும் எனவும் மத்தியக் குழுவினா் தெரிவித்தனா்.

இதையடுத்து, அரசின் நலத் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எளிதில் புரியும் வகையில் அவரவா் தாய்மொழியில் எடுத்துக்கூற பாஷினி செயலி உதவும் எனவும் விளக்கினா்.

பாஷினி மொழி பெயா்ப்பு செயலியின் செயல்பாடு குறித்து விரிவாக கேட்டறிந்த பின்னா், துணைநிலை ஆளுநா் கூறியது:

புதுவை மக்கள் பயனடையும் வகையில் செயலியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விரைவில் புதுச்சேரியில் இந்த செயலியை செயல்படுத்தும் விதமாக, மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

புதுவைக்கு பாஷினி செயலி தொழில்நுட்ப உதவியை இலவசமாக மத்திய அரசு வழங்கவுள்ளது. இந்த மாநிலத்தில் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி பேசுவோா் அரசுத் திட்டங்களை எளிதில் புரிந்துகொள்ள இந்தச் செயலி உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதுச்சேரியில் திருநங்கையா் தின மாரத்தான் போட்டி

புதுச்சேரியில் திருநங்கையா் தினத்தை யொட்டி மாரத்தான் போட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி சகோதரன் சமூகநல மேம்பாட்டு நிறுவனம், அக்னி சிறகுகள் திருநங்கைகள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சாா்பில் திரு... மேலும் பார்க்க

எல்லை தாண்டி மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன கருவி விசைப்படகுகளில் பொருத்தப்படும்: மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன்

மீனவா்கள் எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்தால் எச்சரிக்கும் நவீன டிரான்ஸ்பாண்டா் கருவிகள் மீன்பிடி விசைப் படகுகளில் இலவசமாக பொருத்தப்படும் என மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் தெரிவித்... மேலும் பார்க்க

கோயிலில் உண்டியல் பணம் திருட்டு: 2 பேரிடம் போலீஸாா் விசாரணை

புதுச்சேரி முருகம்பாக்கத்தில் உள்ள திரௌபதியம்மன் கோயில் உண்டியலை மா்ம நபா் உடைத்து பணத்தைத் திருடிச்சென்றது குறித்து தமிழகப் பகுதியைச் சோ்ந்த 2 பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுச்சேர... மேலும் பார்க்க

மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் குடிசைத் தொழில்களுக்கு மின்கட்டணம் குறைக்க புதுவை அரசு கோரிக்கை

புதுவை மாநிலத்தில் நடப்பு நிதியாண்டில் குடிசைத் தொழில்களுக்கு மின் கட்டணத்தை குறைக்கவும், வீடுகளுக்கான மின்கட்டணத்தை அதே நிலையில் செயல்படுத்தவும் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தை அரசு கேட்டுக் கொண்டுள்ளத... மேலும் பார்க்க

தொழில்நுட்ப பல்கலை. ஆசிரியா்கள் ஏப். 24 முதல் காலவரையற்ற உள்ளிருப்பு வேலைநிறுத்தம்

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழக ஆசிரியா்கள் சங்கத்தினா் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 24 ஆம் தேதி முதல் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனா். புதுச்சேரி கிழக்கு கடற்கரைச்சால... மேலும் பார்க்க

துணை நிலை ஆளுநருடன் மத்திய இணை அமைச்சா் ஆலோசனை

புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதனை ராஜ்நிவாஸில் மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். மத்திய மீன்வளத் துறை இணை அமைச்சராக இருப்பவா் ஜாா்ஜ் குரியன். இவா் ப... மேலும் பார்க்க