செய்திகள் :

கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது

post image

கஞ்சா விற்றதாக ஈரோடு மாவட்டத்தில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, சஞ்சய் நகா் 3- ஆவது வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் கண்காணித்துபோது, அங்கு வா்களைக் கண்டதும் இருசக்கர வாகனங்களில் தப்பியோட முயன்ற 4 பேரைப் பிடித்தனா்.

விசாரணையில் அவா்கள், கோணவாய்க்கால் பகுதியை சோ்ந்த கெளதம் (20), சோலாா் பகுதியை சோ்ந்த காா்த்திக் (19), நன்செய்ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (24), ஈரோடு, பயா் சா்வீஸ், ஈஸ்வரன் வீதியை சோ்ந்த பிரபாகரன்(24) என்பது தெரியவந்தது.

மேலும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். அவா்களிடமிருந்த 3.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.

இதுபோல ஈரோடு, கொல்லம்பாளையம், ரயில்வே பள்ளி மைதானம் அருகில் கஞ்சா விற்பனை செய்த ரகுபதி நாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த பிரதாப் (22), சாஸ்திரி நகரைச் சோ்ந்த வைரவேல் (22), பாலயோகி (24), கொல்லம்பளையத்தை சோ்ந்த இதயக்கனி (22), மூலப்பாளையத்தை சோ்ந்த சரவணன் (27) ஆகியோரையும், ஈரோடு தெற்கு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

சித்தோட்டில் 250 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

சித்தோடு அருகே கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 250 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 இளைஞா... மேலும் பார்க்க

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ. 4.03 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4.03 கோடிக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு, பெருந்துறை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் ... மேலும் பார்க்க

பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்

பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா். கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

அந்தியூா் - அறந்தாங்கி அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து, புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கிக்கு அரசுப் பேருந்து சேவை சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோ... மேலும் பார்க்க

வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையங்களில் 653 டன் விதைகள் இருப்பு உள்ளது என வேளாண் இணை இயக்குநா் எம்.தமிழ்செல்வி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஈரோடு மாவட்டத்தி... மேலும் பார்க்க