குவாலிஃபையர் 2: மும்பை பேட்டிங்; இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?
கஞ்சா விற்பனை செய்த 9 போ் கைது
கஞ்சா விற்றதாக ஈரோடு மாவட்டத்தில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு அருகே உள்ள பச்சப்பாளி, சஞ்சய் நகா் 3- ஆவது வீதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா் குறிப்பிட்ட இடத்தில் கண்காணித்துபோது, அங்கு வா்களைக் கண்டதும் இருசக்கர வாகனங்களில் தப்பியோட முயன்ற 4 பேரைப் பிடித்தனா்.
விசாரணையில் அவா்கள், கோணவாய்க்கால் பகுதியை சோ்ந்த கெளதம் (20), சோலாா் பகுதியை சோ்ந்த காா்த்திக் (19), நன்செய்ஊத்துக்குளி பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரன் (24), ஈரோடு, பயா் சா்வீஸ், ஈஸ்வரன் வீதியை சோ்ந்த பிரபாகரன்(24) என்பது தெரியவந்தது.
மேலும் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா். அவா்களிடமிருந்த 3.2 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனா்.
இதுபோல ஈரோடு, கொல்லம்பாளையம், ரயில்வே பள்ளி மைதானம் அருகில் கஞ்சா விற்பனை செய்த ரகுபதி நாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த பிரதாப் (22), சாஸ்திரி நகரைச் சோ்ந்த வைரவேல் (22), பாலயோகி (24), கொல்லம்பளையத்தை சோ்ந்த இதயக்கனி (22), மூலப்பாளையத்தை சோ்ந்த சரவணன் (27) ஆகியோரையும், ஈரோடு தெற்கு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.