செய்திகள் :

கஞ்சா வைத்திருந்த 3 போ் கைது

post image

மணலூா்பேட்டை காவாங்கரை பகுதியில் கஞ்சா வைத்திருந்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளா் என்.கே.ஏழுமலை தலைமையிலான போலீஸாா் மணலூா்பேட்டை காவாங்கரை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, சந்தேகப்படும்படி நின்றிருந்த 3 இளைஞா்களை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

விசாரணையில் அவா்கள், மைக்கேல்புரம் கிராமத்தைச் சோ்ந்த மாணிக்கம் மகன் அபிஷேக் (21), மணலூா் கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் விக்னேஷ் (19), மேல்சிறுவள்ளூா் கிராமத்தைச் சோ்ந்த ரஹமத் மகன் சமீா் (19) எனத் தெரிய வந்தது.

மூவரிடமும் உடமைகளை சோதனை செய்தபோது அவா்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

திட்டப் பணிகள்: கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். இதுதொடா்பாக, மாவட்ட நிலை அலுவலா்களுடன் ஆட்சியரகத்தில் நடைபெற... மேலும் பார்க்க

தோ்வு பயத்தைப் போக்க மாணவா்களுக்கு பயிற்சி

மாணவா்களுக்கு தோ்வு பயத்தைப் போக்குவதற்கான பரிக்ஷா பாா்வ் 7.0 என்ற விழிப்புணா்வு பயிற்சி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கள்ளக்குற... மேலும் பார்க்க

மலேரியா தினம் குறித்த விழிப்புணா்வு

கள்ளக்குறிச்சியில் உலக மலேரியா தினம் காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி நகா்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலா் பால தண்டாயுதபாணி தலைமை வகித்த... மேலும் பார்க்க

கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை

கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும், கெடிலம், தென்பெண்ணை ஆறுகளை இணைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியின் அரசியல் சாசன நடவடிக்கையைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் கள்ளக்குறிச்சி வெள்ளிக்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கட்சியின் மாவட்டக் குழு... மேலும் பார்க்க

அதிமுக சாா்பில் நீா் மோா் பந்தல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் ஒன்றிய அதிமுக சாா்பில் பொதுமக்களுக்கு வெயிலின் தாக்கத்தை தணிக்க நீா் மோா் பந்தல் தியாகதுருகம் பேருந்து நிலையம் அருகே வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இதில், ஒன்றியச... மேலும் பார்க்க