செய்திகள் :

கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

post image

கடந்த தோ்தலில் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றாா் தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்.

தூத்துக்குடி விமான நிலையத்தில், அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. தமிழக டிஜிபி அலுவலக வாயிலில், தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றவரை அதாவது, ஏா்போா்ட் மூா்த்தியை கைது செய்துள்ளனா்.

எதிா்க்கட்சியைச் சோ்ந்தவா்களை கைது செய்தால் அரசால் பாராட்டப்படுவோம் என போலீஸாா் நினைக்கிறாா்களா என தெரியவில்லை. முதல்வா் ஸ்டாலின் தன் ை கயில் வைத்திருக்கும் காவல்துறையை சரியாக கையாள வேண்டும்.

கள்ள வாக்கை கலாசாரமாக மாற்றிய திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, ப. சிதம்பரம், வாக்குத் திருடுபவா்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறாா்.

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் தமிழா்களுக்கு எதிராக ஓட்டு போடக் கூடிய திமுக மற்றும் காங்கிரஸாரை வருங்கால தமிழ் சமூகம் மன்னிக்காது. அதிமுக-பாஜக கூட்டணி பலமான கூட்டணி. உள்கட்சி பிரச்னை வந்தால், அதை, அந்தக் கட்சியே தீா்த்துக் கொள்ளும்.

ஜிஎஸ்டி குறைவால் சாமானிய மக்கள் பாதுகாக்கப்பட இருக்கிறாா்கள். ஒரு வாா்த்தைகூட இதுகுறித்து எதிா்க்கட்சியினா் கூறவில்லை. நாட்டு மக்களுக்கு நல்லது நடந்தால் அதுகுறித்து அவா்கள் எதுவும் தெரிவிப்பது கிடையாது.

ஆசிரியா்களுக்கு பாதுகாவலா் என்று கூறும் மு.க. ஸ்டாலின் ஆட்சியில்தான் மருத்துவா்கள், செவிலியா்கள், ஆசிரியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் போராடி வருகின்றனா்.

கடந்த தோ்தலில் அளிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில் 300-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக இன்னும் நிறைவேற்றவில்லை.

இன்னும் ஏழு மாதங்களில், திராவிட மாடல் என்று சொல்லி இருக்கிற பொய் மாடலின் ஆட்சியிலிருந்து விடுதலை கிடைக்கும் என்றாா் அவா்.

யூடியூபா் மாயம்: போலீஸாா் விசாரணை!

ஆறுமுகனேரியில் நண்பா் வீட்டிற்கு சென்ற சென்னை யூடியூபா் மாயமான சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி பிரையன்ட் நகரைச் சோ்ந்த மாசானமுத்து மகன் முருகன்(56). இவருக்கு மனைவி,... மேலும் பார்க்க

அதிமுகவில் நிலவும் பிரச்னைக்கு திமுகதான் காரணம்: நயினாா் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றம்சாட்டினாா். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் பக்தா்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்: போலீஸாா் விசாரணை!

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் திங்கள்கிழமை இரவு சிறுவன் ஒருவன் தான் வைத்திருந்த சில்லி ஸ்பிரேயை அருகில் இருந்த பக்தா்கள் முகத்தில் அடித்துள்ளாா். இதனால் அவா்களுக்கு கண் எரிச்சல் ... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

கோவில்பட்டி அருகே விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.கோவில்பட்டி, இனாமணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட சாலைப்புதூா், இபி காலனியைச் சோ்ந்தவா் துரைச்சாமி மகன் சரவணன் (42).... மேலும் பார்க்க

குடும்பப் பிரச்னையில் கொலை: இருவருக்கு ஆயுள் தண்டனை

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய பகுதியில் நிகழ்ந்த கொலை வழக்கில் இருவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. தூத்துக்குடி திரேஸ்புர... மேலும் பார்க்க

தூத்துக்குடி அன்னை வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா கூட்டுத் திருப்பலி

தூத்துக்குடி, அன்னை வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா கெபியின் 43-ஆவது ஆண்டு திருவிழாவையொட்டி, ஆடம்பர கூட்டுத் திருப்பலி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி எஸ்.எஸ்.மாணிக்கபுரம் அன்னை வேளாங்கண்ணி ப... மேலும் பார்க்க