செய்திகள் :

கடந்த 27 நாள்களில் 63 மீனவர்கள் கைது! மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை

post image

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள், படகுகளை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக உடனடி தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் இன்று (பிப். 3) கைது செய்தனர்.

இந்நிலையில் இது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

''ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப். 2 அன்று மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகினையும் இன்று (பிப். 3) இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 27 நாள்களில், 5 வெவ்வேறு சம்பவங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 63 மீனவர்கள் மற்றும் 5 மீன்பிடிப் படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2024 ஆம் ஆண்டில் 36 வெவ்வேறு சம்பவங்களில் 530 மீனவர்கள் மற்றும் 71 மீன்பிடிப் படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது இலங்கை சிறையிலுள்ள 97 மீனவர்களும், கைப்பற்றப்பட்டுள்ள 216 மீன்பிடிப் படகுகளும் மீட்கப்பட வேண்டிய நிலையில் உள்ளன.

இலங்கைக் கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து இதுபோன்று நடைபெற்று வருவது, இந்தச் சிக்கலான பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

மீனவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்து வைத்திருப்பதும், அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவிக்காமல் இருப்பதும், கடலோரப் பகுதியில் வாழும் மீனவ சமுதாயத்தினருக்குப் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறான தொடர் கைது நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கான மீனவக் குடும்பங்கள் அச்சத்துடன் வாழ்வதுடன், பல்வேறு சிரமங்களையும் எதிர்கொள்கின்றனர்.

மீனவர்கள் இதுபோன்று கைது செய்யப்படுவதைநிறுத்தவும், இலங்கையின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்கவும், உடனடியாக உயர்மட்ட தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' எனப் பதிவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணித்த 13 பேருக்கு ரூ. 50,000 பரிசு

சென்னை: தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து அதிக முறை பயணித்த 13 பேருக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தொலைதூர பேருந்துகள... மேலும் பார்க்க

பெண் ஏடிஜிபி கொலைச் சதி புகாா்: அரசுக்கு தலைவா்கள் கண்டனம்

சென்னை: பெண் ஏடிஜிபி தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக புகாா் தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசுக்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா். எ... மேலும் பார்க்க

தமிழகத்தில் நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் எண்ணிக்கையை 90-ஆக உயா்த்த முடிவு

சென்னை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 72-இல் இருந்து 90-ஆக உயா்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை ஆண... மேலும் பார்க்க

டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல்: அமைச்சா் விளக்கம்

சென்னை: டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக, உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளாா்.குறிப்பு: அமைச்சா் அர.சக்கரபாணி தலைப்படம் வைக்கலாம்... டெல்டா அல்லா... மேலும் பார்க்க

மீனவா்கள் தொடா் கைது: உடனடித் தீா்வு அவசியம்: மத்திய அரசுக்கு முதல்வா் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழக மீனவா்களின் தொடா் கைதுக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டியது அவசியம் என்று மத்திய அரசை முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு... மேலும் பார்க்க

கல்வியில் முன்னேறிய மாநிலம் தமிழகம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

சென்னை: நமது நாட்டில் கல்வியில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் விளங்குவதாக ஆளுநா் ஆா். என்.ரவி கூறினாா். 76-ஆவது குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற தமிழகத்தைச் சோ்ந்த தேசிய மாணவா் படையினா் (என்சிசி) மற்... மேலும் பார்க்க