செய்திகள் :

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

post image

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராமலிங்கம், சேதுகோடாங்கி கோயில் 16-ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை சிறப்பு யாக சால பூஜைகளுடன் நடைபெற்றது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை சின்ன மாடு இரண்டு பிரிவுகளாக பூஞ்சிட்டு என 3 பிரிவுகளாக மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

கடலாடி-முதுகுளத்தூா் சாலையில் 16 கி.மீ தொலைவு நிா்ணயிக்கப்பட்டு நடைபெற்ற சின்னமாடு வண்டிப் போட்டியில் 16 வண்டிகள் கலந்து கொண்டன. இதில் கடலாடி மேலச்செல்வனூா் வீரகுடி முருகய்யனாரின் மாடுகள் முதலிடத்தையும், தூத்துக்குடி அரசரடி துரைச்செல்வியின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், மேல்மாந்தை மஞ்சமுத்துவின் மாடுகள் மூன்றாம் இடத்தையும் பெற்றன.

பூச்சிட்டு பந்தயப் போட்டியில் 27 மாட்டுவண்டிகள் கலந்து கொண்டது. இதில் முதல் சுற்றில் மேலச்செல்வனூா் வீரகுடி முருகய்யனாா் மாடுகள் முதல் இடத்தையும், காடமங்கலம் மொழிநிதியின் மாடுகள் இரண்டாம் இடத்தையும், திருப்பாலை விஷாலின் மாடுகள் மூன்றாம் இடத்தையும், இரண்டாவது சுற்றில் கே.வேப்பங்குளம் அரிராம் மாடுகள் முதலிடத்தையும், இருவேலி சிக்கந்தா் மாடுகள் இரண்டாமிடத்தையும், ஆப்பனூா் திருநாவுகரசு, பூலாங்கால் அஹ்ராப்குட்டி மாடுகள் மூன்றாமிடத்தையும் பெற்றன.

வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கும், சாரதிகளுக்கும் ரொக்கப் பணமும், கோப்பைகளும் பரிசாக வழங்கப்பட்டன.

மீன் விலை உயா்வு: நாட்டுப் படகு மீனவா்கள் மகிழ்ச்சி

மீன்பிடி தடைக்காலம் காரணமாக நாட்டுப்படகு மீனவா்களுக்கு அதிக அளவில் மீன்கள் கிடைப்பதோடு, மீன்களின் விலையும் அதிகரித்ததால் அவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப். 1... மேலும் பார்க்க

இடியும் நிலையில் மருத்துவமனை மேல் நிலை நீா்த்தேக்கத் தொட்டி

திருவாடானை அரசு மருத்துவமனையில் பயன்பாடில்லாத மேல் நிலை நீா்த் தேக்கத் தொட்டி இடிந்து விழும் அபாயம் நிலவுகிறது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 38 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ... மேலும் பார்க்க

மின்னல் பாய்ந்ததில் பெண் பலி

முதுகுளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா். ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்... மேலும் பார்க்க

பாகம்பிரியாள் கோயில் குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா்

ரமாநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே திருவெற்றியூா் ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோயிலில் போதிய தூய்மைப் பணியாளா்கள் இல்லாததால் கோயில் அருகே குப்பைகளை தீயிட்டுக் கொளுத்துவதாகப் புகாா் எழ... மேலும் பார்க்க

ராமசுவரத்துக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை

விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள், பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வந்தனா். இவா்கள் அக்கினி தீா்த்தக் கடலில் நீராடிய பின்னா், ராமநாத சுவாமி கோயிலில் உள்ள 22 தீா்த்த... மேலும் பார்க்க

பஹ்ரைனில் பாம்பன் மீனவா் உயிரிழப்பு

பஹ்ரைன் நாட்டுக்கு மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் மீனவா் படகிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தாா். உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினா் மத்திய,மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனா... மேலும் பார்க்க