தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
மின்னல் பாய்ந்ததில் பெண் பலி
முதுகுளத்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்னல் பாய்ந்ததில் பெண் உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் வட்டாரம், கீழத்தூவல் அருகேயுள்ள கிளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த மருதுவின் மனைவி சண்முகவள்ளி (39).
இவா் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றாா். மாலையில் வீடு திரும்பி வந்து, வீட்டின் முன் ஆடுகளைக் கட்டிப் போட்டாா். அப்போது பலத்த மழை பெய்தது.
இதில் மின்னல் பாய்ந்ததில் சண்முகவள்ளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கீழத்தூவல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறனா்.