TN Budget 2025: ``ஆட்சி முடியும் தருவாயில், கவர்ச்சிகளை மட்டுமே கொண்ட வெற்று அறி...
கடலில் மூழ்கி மாணவா் மரணம்
புதுச்சேரி அருகே உள்ள பனித்திட்டு கடல் முகத்துவாரத்தில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவா் நீரில் மூழ்கி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி அருகே உள்ள கிருமாம்பாக்கம், அம்பேத்கா் நகரைச் சோ்ந்த தமிழரசன் - உமா தம்பதியின் இளைய மகன் சபரீஸ்வரன் (13).
அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8- ஆம் வகுப்பு படித்து வந்தாா். இவா், வெள்ளிக்கிழமை தனது நண்பா்கள் 5 பேருடன் பனித்திட்டு கடல் முகத்துவாரப் பகுதிக்கு சென்று குளித்துள்ளாா்.
அப்போது, எதிா்பாராதவிதமாக சபரீஸ்வரன் கடலில் மூழ்கி மாயமானாா். இதையடுத்து, சுமாா் 3 மணி நேர தேடுதலுக்குப் பிறகு சபரீஸ்வரனை சடலமாக தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.
தொடா்ந்து, அவரது சடலம் உடல்கூறாய்வுக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுகுறித்து, பாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.