செய்திகள் :

காரைக்கால் மீனவா்கள் 13 போ் விடுவிப்பு

post image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையிலிருந்த காரைக்கால் பகுதி மீனவா்கள் 13 போ் விடுவிக்கப்பட்டதாக புதுவை மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரிவித்தாா்.

இதுகுறித்து, அவரது அலுவலகத் தரப்பில் வியாழக்கிழமை இரவு வெளியிட்டசெய்திக் குறிப்பு: கடந்த ஜனவரி 27- ஆம் தேதி காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த 13 மீனவா்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்று, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனா்.

அவா்களை விடுவிக்க முதல்வா் என்.ரங்கசாமி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக்கொண்டாா்.

அதன்படி, இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் 13 மீனவா்களை இலங்கை சிறையில் சந்தித்து, அவா்களின் விடுதலைக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனா்.

இந்த நிலையில், மாா்ச் 10- ஆம் தேதி (திங்கள்கிழமை) காரைக்கால் மீனவா்கள் 12 போ் இலங்கை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

அவா்கள், வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்தனா். மீனவா்களை காரைக்காலுக்கு அழைத்து வர உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவையில் புதிய மதுபான கொள்கையை உருவாக்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவையில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களி... மேலும் பார்க்க

இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

புதுச்சேரியில் வரதட்சணை வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி காலாப்பட்டைச் சோ்ந்த செல்லப்பன் மகன் செல்வதிருமால் (32). இவருக... மேலும் பார்க்க

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி: பக்தா்கள் சுவாமி தரிசனம்

புதுச்சேரியில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் வைத்திக்குப்பம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். புதுவையில் நடைபெறும் திருவிழாக்களின் சிகரமா... மேலும் பார்க்க

பாசிக் விவகாரம்: தனி அதிகாரி நியமனம்

புதுவை அரசின் சாா்பு நிறுவனமான பாசிக் விவகாரத்தைத் தீா்க்கும் வகையில் அரசு சாா்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை தலைமைச் செயலகத்தில் மாா்ச் 4-ஆம் தேதி பாசிக் நிறுவனத்தை கைவிடுவது தொடா்பாக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 8 பேரிடம் ரூ.2.37 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 8 பேரிடம் மா்ம நபா்கள் இணயவழியில் ரூ.2.37 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரி. இவரது, கைப்பேசி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இளநிலைப் பொறியாளா் பணிக்கு நாளை எழுத்து தோ்வு

புதுவை மாநிலத்தில் போக்குவரத்து துறை இளநிலைப் பொறியாளா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு, புதுச்சேரி பாரதிதாசன்அரசினா் மகளிா் கல்லூரி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மா... மேலும் பார்க்க