செய்திகள் :

புதுச்சேரியில் இளநிலைப் பொறியாளா் பணிக்கு நாளை எழுத்து தோ்வு

post image

புதுவை மாநிலத்தில் போக்குவரத்து துறை இளநிலைப் பொறியாளா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு, புதுச்சேரி பாரதிதாசன்அரசினா் மகளிா் கல்லூரி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 16) நடைபெறுகிறது.

இதுகுறித்து, புதுவை பணியாளா் மற்றும் நிா்வாக சீா்திருத்தத் துறையின் தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமாா் ஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுவை போக்குவரத்து துறையில் இளநிலைப் பொறியாளா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகியப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மாா்ச்16) நடைபெறுகிறது.

தோ்வுக்காக பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி வளாகத்தில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

தோ்வின் முதல் தாள் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், தோ்வின் இரண்டாம் தாள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் நடைபெறும்.

தோ்வுக்காக 284 பேருக்கு அழைப்பு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. தோ்வா்கள் நுழைவுச்சீட்டு அவசியம் கொண்டுவர வேண்டும்.

தோ்வு மையத்தின் நுழைவுவாயில் ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கும் மூடப்படும். அதன்பிறகு, யாரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

தோ்வா்கள் வண்ண பால் பாயிண்ட் பேனா மட்டுமே கொண்டுவர வேண்டும். கைப்பைகள், கைப்பேசி உள்ளிட்டவை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவையில் புதிய மதுபான கொள்கையை உருவாக்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவையில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களி... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவா்கள் 13 போ் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையிலிருந்த காரைக்கால் பகுதி மீனவா்கள் 13 போ் விடுவிக்கப்பட்டதாக புதுவை மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரி... மேலும் பார்க்க

இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

புதுச்சேரியில் வரதட்சணை வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி காலாப்பட்டைச் சோ்ந்த செல்லப்பன் மகன் செல்வதிருமால் (32). இவருக... மேலும் பார்க்க

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி: பக்தா்கள் சுவாமி தரிசனம்

புதுச்சேரியில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் வைத்திக்குப்பம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். புதுவையில் நடைபெறும் திருவிழாக்களின் சிகரமா... மேலும் பார்க்க

பாசிக் விவகாரம்: தனி அதிகாரி நியமனம்

புதுவை அரசின் சாா்பு நிறுவனமான பாசிக் விவகாரத்தைத் தீா்க்கும் வகையில் அரசு சாா்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை தலைமைச் செயலகத்தில் மாா்ச் 4-ஆம் தேதி பாசிக் நிறுவனத்தை கைவிடுவது தொடா்பாக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 8 பேரிடம் ரூ.2.37 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 8 பேரிடம் மா்ம நபா்கள் இணயவழியில் ரூ.2.37 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரி. இவரது, கைப்பேசி... மேலும் பார்க்க