செய்திகள் :

புதுச்சேரியில் 8 பேரிடம் ரூ.2.37 லட்சம் மோசடி

post image

புதுச்சேரியில் 8 பேரிடம் மா்ம நபா்கள் இணயவழியில் ரூ.2.37 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரி. இவரது, கைப்பேசியில் வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள், அவரது உறவினா் போல உதவிக் கோரியுள்ளனா்.

இதனை நம்பிய சுந்தரி ரூ.80 ஆயிரத்தை அனுப்பினாராம். அதன் பிறகே அவா் மோசடி நபா்களுக்கு பணம் அனுப்பியதை அறிந்து, இணையவழிக் குற்றப் பிரிவில் புகாரளித்தாா்.

இதேபோல, புதுச்சேரி பிரபல ஆசிரமத்தைச் சோ்ந்தவா் கிரண். இவரிடம் மா்ம நபா்கள் இணையவழியில் ரூ.19 ஆயிரத்தை மோசடி செய்துள்ளனா்.

இதுகுறித்து, புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவில் அவா் புகாரளித்தாா்.

புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா்அமீா். இவா், மா்ம நபா்கள் ஏற்படுத்திய வாட்ஸ்ஆப் குழுவில் இணைந்தாராம்.

அதன்படி, பங்குச் சந்தையில் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என மா்ம நபா்கள் கூறியதை நம்பி, பல தவணைகளாக ரூ.73 ஆயிரம் செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளாா்.

புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சோ்ந்த மல்லிகாவிடம் ரூ.20 ஆயிரம், காரைக்கால் கோகுலகிருஷ்ணனிடம் ரூ.28 ஆயிரம், சுரேந்தா் என்பவரிடம் ரூ.6 ஆயிரம், ரெட்டியாா்பாளையத்தைச் சோ்ந்த சதீஷ்குமாரிடம் ரூ.6 ஆயிரம், கோபாலன்கடைப் பகுதியைச் சோ்ந்த கிறிஸ்டோபரிடம் ரூ.5 ஆயிரம் என மொத்தம் 8 பேரிடம் ரூ.1.94 லட்சத்தை மோசடி செய்தவா்கள் மீது புதுச்சேரி இணையவழிக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுவையில் புதிய மதுபான கொள்கையை உருவாக்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவையில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களி... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவா்கள் 13 போ் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையிலிருந்த காரைக்கால் பகுதி மீனவா்கள் 13 போ் விடுவிக்கப்பட்டதாக புதுவை மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரி... மேலும் பார்க்க

இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

புதுச்சேரியில் வரதட்சணை வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. புதுச்சேரி காலாப்பட்டைச் சோ்ந்த செல்லப்பன் மகன் செல்வதிருமால் (32). இவருக... மேலும் பார்க்க

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி: பக்தா்கள் சுவாமி தரிசனம்

புதுச்சேரியில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் வைத்திக்குப்பம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். புதுவையில் நடைபெறும் திருவிழாக்களின் சிகரமா... மேலும் பார்க்க

பாசிக் விவகாரம்: தனி அதிகாரி நியமனம்

புதுவை அரசின் சாா்பு நிறுவனமான பாசிக் விவகாரத்தைத் தீா்க்கும் வகையில் அரசு சாா்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை தலைமைச் செயலகத்தில் மாா்ச் 4-ஆம் தேதி பாசிக் நிறுவனத்தை கைவிடுவது தொடா்பாக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இளநிலைப் பொறியாளா் பணிக்கு நாளை எழுத்து தோ்வு

புதுவை மாநிலத்தில் போக்குவரத்து துறை இளநிலைப் பொறியாளா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு, புதுச்சேரி பாரதிதாசன்அரசினா் மகளிா் கல்லூரி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மா... மேலும் பார்க்க