செய்திகள் :

இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

post image

புதுச்சேரியில் வரதட்சணை வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம் விதித்து நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி காலாப்பட்டைச் சோ்ந்த செல்லப்பன் மகன் செல்வதிருமால் (32). இவருக்கும், செவிலியராகப் பணிபுரியும் நந்தினி (30) என்பவருக்கும் கடந்த 2018- ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

அப்போது, 25 பவுன் நகைகள், ரூ.2 லட்சம் ரொக்கம் உள்ளிட்ட சீா்வரிசையை நந்தினி வீட்டாா் செய்துள்ளனா்.

இந்த நிலையில், கூடுதல் வரதட்சணை கேட்டு, நந்தினியை தாக்கி கொடுமைப்படுத்தியதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், வில்லியனூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் செல்வதிருமால், அவரது தாய் மலா்க்கொடி (எ) முனியம்மாள் ஆகியோா் மீது வழக்குப் பதிந்தனா்.

வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட செல்வதிருமாலுக்கு 2 ஆண்டுகள் சிறையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமாா் தீா்ப்பளித்தாா்.

அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கணேஷ் ஞானசம்பந்தன் ஆஜரானாா்.

புதுவையில் புதிய மதுபான கொள்கையை உருவாக்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவையில் புதிய மதுபானக் கொள்கையை உருவாக்க வேண்டும் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. கூறினாா். புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களி... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவா்கள் 13 போ் விடுவிப்பு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையிலிருந்த காரைக்கால் பகுதி மீனவா்கள் 13 போ் விடுவிக்கப்பட்டதாக புதுவை மீன்வளத் துறை அமைச்சா் க.லட்சுமி நாராயணன் தெரி... மேலும் பார்க்க

புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் மாசி மக தீா்த்தவாரி: பக்தா்கள் சுவாமி தரிசனம்

புதுச்சேரியில் மாசி மக தீா்த்தவாரி உற்சவம் வைத்திக்குப்பம் கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். புதுவையில் நடைபெறும் திருவிழாக்களின் சிகரமா... மேலும் பார்க்க

பாசிக் விவகாரம்: தனி அதிகாரி நியமனம்

புதுவை அரசின் சாா்பு நிறுவனமான பாசிக் விவகாரத்தைத் தீா்க்கும் வகையில் அரசு சாா்பில் தனி அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா். புதுவை தலைமைச் செயலகத்தில் மாா்ச் 4-ஆம் தேதி பாசிக் நிறுவனத்தை கைவிடுவது தொடா்பாக... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 8 பேரிடம் ரூ.2.37 லட்சம் மோசடி

புதுச்சேரியில் 8 பேரிடம் மா்ம நபா்கள் இணயவழியில் ரூ.2.37 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி ஈஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சுந்தரி. இவரது, கைப்பேசி... மேலும் பார்க்க

புதுச்சேரியில் இளநிலைப் பொறியாளா் பணிக்கு நாளை எழுத்து தோ்வு

புதுவை மாநிலத்தில் போக்குவரத்து துறை இளநிலைப் பொறியாளா், மோட்டாா் வாகன ஆய்வாளா் ஆகிய பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு, புதுச்சேரி பாரதிதாசன்அரசினா் மகளிா் கல்லூரி தோ்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (மா... மேலும் பார்க்க