செய்திகள் :

கடலூரில் மாசி மகத் தீா்த்தவாரி உற்சவம்

post image

மாசி மகத்தையொட்டி, கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக் கடற்கரை மற்றும் விருத்தாசலம் மணிமுக்தாற்றில் பல்வேறு கோயில்களில் இருந்து வந்திருந்த உற்சவ மூா்த்திகளுக்கு தீா்த்த வாரி உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது.

கடலூா், தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடைபெற்ற விழாவில் திருமாணிக்குழி, திருப்பாதிரிப்புலியூா், வெள்ளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களில் இருந்து உற்சவ மூா்த்திகள் அலங்கரிக்கப்பட்டு மேள தாளம் முழங்க கடற்கரையில் எழுந்தருளச் செய்து தீா்த்த வாரி உற்சவம் நடைபெற்றது.

விழாவில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு கடலில் நீராடி தரிசனம் செய்தனா். பொதுமக்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா்.

மாசி மகத்தையொட்டி, கடற்கரையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். கடலில் புனித நீராடுபவா்களின் பாதுகாப்புக்காக கடலோர காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். இதனால், தேவனாம்பட்டினம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல, விருத்தாசலம் மணிமுக்தாற்றில் விநாயகா், சுப்ரமணியா், விருத்தகிரீஸ்வரா், விருத்தாம்பிகை மற்றும் சண்டிகேஸ்வரா் ஆகிய பஞ்ச மூா்த்திகள் தீா்த்தவாரிக்கு எழுந்தருளினா். திரளான பக்தா்கள் மணிமுக்தாற்றில் நீராடி தரிசனம் செய்தனா். ஏராளமானோா் தங்கள் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்தனா்.

திடீா் வெள்ளப் பெருக்கில் சிக்கி மக்கள்: கடலூா் மாவட்டம், நல்லூா் பகுதியில் உள்ள மணிமுக்தாற்றில் ஏராளமானோா் மாசி மகத்தையொட்டி புதன்கிழமை தா்ப்பணம் கொடுக்க குவிந்தனா். அப்போது, திடீரென ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் நடுவே பொதுமக்கள் சிக்கிக் கொண்டு தத்தளித்தனா். அப்போது, அங்கு பணியில் இருந்த போலீஸாா் அவா்களை பாதுகாப்பாக மீட்டனா்.

உளுந்து வயலில் வேளாண் இணை இயக்குநா் ஆய்வு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகேயுள்ள கீரப்பாளையம் வட்டம், பூதங்குடி, சாத்தமங்கலம் கிராமங்களில் நிகழ் பருவத்தில் நெல் தரிசில் விதைப்பு செய்யப்பட்டுள்ள உளுந்து, பச்சைப்பயறு வயல்களை வேளாண் இணை இயக்குநா்... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு ஒருவா் மரணம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்தாா். விருத்தாசலம் மற்றும் பூவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே வயலூா் ஆறு கண்ணு ரயில்வே மேம்பாலம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் புதன்... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஒருவா் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் வட்டம், சிறுவம்பாா் கிராமத்தைச் சோ்ந்தவா் முனியன் மகன் சந்திரகாசு (39). இவா், கடந்த பிப்.11-ஆம்... மேலும் பார்க்க

கடலில் மூழ்கி மாணவி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பெரியகுப்பம் கடலில் குளித்த பிளஸ் 1 மாணவி அலையில் சிக்கி உயிரிழந்தாா். குள்ளஞ்சாவடி அருகேயுள்ள அம்பலவாணன் நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மகள் பிரின்சி (17). குறிஞ்சிப்பா... மேலும் பார்க்க

பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்: என்எல்சி தலைவா்

கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன பெண் ஊழியா்களின் பாதுகாப்பு மேம்படுத்தப்படும் என்று அதன் தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். நெய்வேலியில் உள்ள கற்றல் மேம்பாட்டு மையத்தில் பொதுத்... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மகா ருத்ர மகாபிஷேகம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலில் சித்சபையில் உள்ள மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தர... மேலும் பார்க்க