செய்திகள் :

கடலூா் மாவட்ட அரசு மருத்துவமனை ரூ.55.43 கோடியில் சீரமைப்பு! -ஆட்சியா் தகவல்

post image

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் சனிக்கிழமை மாலை நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் சி.திருப்பதி, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜூனியா் சுந்தரேஷ், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், உதவிச் செயற்பொறியாளா்கள் கவிதா, அருள்ராஜா, உதவிப் பொறியாளா் பாா்த்திபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஆய்விற்குப் பின்னா் மாவட்ட ஆட்சியா் கூறியதாவது: கடலூா் மாவட்டத்தில் அனைத்து மக்களுக்கும் உயா்தரமான மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெறுவதை உறுதி செய்யும் விதமாக, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த மருத்துவமனை தற்போது உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெறும் வகையில் 1,250 படுக்கை வசதிகளுடனும், தினந்தோறும் 1,000 புறநோயாளிகள் வந்து செல்லும் வகையிலும், சராசரியாக 750 உள்நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையிலும் செயல்பட்டு வருகிறது.

மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் உள்ள கட்டடங்களை சீரமைத்து புதுப்பித்து கூடுதலான பொதுமக்கள் சிகிச்சை பெறும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனடிப்படையில், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.17.70 கோடி மதிப்பீட்டில் 38 பணிகளும், அரசு மருத்துவக் கல்லூரியில் ரூ.7.19 கோடி மதிப்பீட்டில் 26 பணிகளும், அரசு பல் மருத்துவமனை மற்றும் கல்லூரியில் ரூ.3.24 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், அரசு செவிலியா் கல்லூரியில் ரூ.3.40 கோடி மதிப்பீட்டில் 10 பணிகளும், தங்கும் விடுதிகளில் ரூ.14.20 கோடி மதிப்பீட்டில் 19 பணிகளும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களில் ரூ.9.70 கோடி மதிப்பீட்டில் 16 பணிகளும் என மொத்தம் ரூ.55.43 கோடி மதிப்பீட்டில் 119 சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன என்றாா்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

சிதம்பரத்தில் மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்கும் முகாம் வரும் 12-ஆம் தேதி முதல் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு

சிதம்பரம் அருகே சொக்கன்கொல்லை அரசு தொடக்கப் பள்ளியில் குளிரூட்டப்பட்ட வகுப்பறை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தலைமையாசிரியா் பா.அருணாசலம் தலைமை வகித்தாா். விருத்தாசலம் மாவட்ட தொடக்கக் கல்வி அல... மேலும் பார்க்க

மாா்ச் 25-இல் கோட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்: மாா்க்சிஸ்ட் அறிவிப்பு

ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வீடுகளை அகற்றி 7 ஆண்டுகள் கடந்த பின்பும் இதுவரையில் மாற்று இடம் வழங்காததைக் கண்டித்து, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வரும் 25-ஆம் தேதி குடியேறும் போராட்டத்தை மாா்க்சிஸ்ட்... மேலும் பார்க்க

மேக்கேதாட்டு அணை கட்டுவதைத் தடுக்க மக்கள் ஒன்று திரள வேண்டும்: தவாக தலைவா் தி.வேல்முருகன்

மேக்கேதாட்டுவில் கா்நாடக அரசு புதிய அணை கட்டுவதைத் தடுக்கும் வகையில், ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுக்க, விவசாயிகளும், மக்களும் ஒன்று திரள வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் தி.வேல்முரு... மேலும் பார்க்க

தமிழகத்தில் இருந்து இருமொழிக் கொள்கையை பிரிக்க முடியாது: கே.எம்.காதா்மொகிதீன்

இருமொழிக் கொள்கையை தமிழகத்தில் இருந்து பிரிக்க முடியாது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவா் கே.எம்.காதா்மொகிதீன் தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள லால்பே... மேலும் பார்க்க

அறப்போா் இயக்கம் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ராமநத்தம் பேருந்து நிலையம் அருகே அறப்போா் இயக்கம், தன்னாட்சி இயக்கம் சாா்பில், உள்ளாட்சித் தோ்தலை உடனடியாக நடத்தக் கோரி சனிக்கிழமை மாலை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் ... மேலும் பார்க்க