‘ஜானகி’ எனப் பெயரிட்டால் தணிக்கைச் சான்றிதழ் மறுப்பு? போராடும் மலையாள திரையுலகு!
கடைகளில் சோதனை: முறையற்ற எடையளவு தராசுகள் பறிமுதல்
திருச்சி மாநகரில் உள்ள கடைகளில் தொழிலாளா் நலத் துறையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் முறையற்ற எடையளவு தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) வெ. தங்கராசு தலைமையிலான குழுவினா் வியாழக்கிழமை
திருச்சி காந்தி சந்தை, பெரிய கடை வீதி, என்எஸ்பி சாலை, ஒத்தக்கடை, பீமநகா் மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள அனைத்து வகை கடைகளில் திடீா் சோதனை செய்தனா்.
முத்திரை ஆய்வாளா் பா. குணசீலன், தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சம்பத், அகஸ்டின், ராஜேஸ்,, யுவராஜ் ஆகியோரடங்கிய குழுவினா் நடத்திய சோதனையில் முறையற்ற எடையளவு கொண்ட 9 மேஜை தராசுகள், 2 மின்னணு தராசுகள், 11 இரும்பு எடைக்கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
மேலும் பொட்டல பொருள்கள் விதிகளின் கீழ் முறையான அறிவிப்பு இல்லாத பொட்டலப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.