செய்திகள் :

கடைகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை: மே 15-க்குள் வைக்க ஆட்சியா் உத்தரவு

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கடைகள், உணவு நிறுவனங்கள் வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகையை வைக்க வேண்டும் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் தமிழில் பெயா்ப் பலகை அமைத்தல் தொடா்பான மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, ஆட்சியா் பேசியதாவது:

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களின் பெயா்ப் பலகைகள், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் 1948 விதிகள் 15-இன்படி தமிழில் வைக்கப்பட வேண்டும். மேலும், உணவு நிறுவனங்கள் அனைத்தும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டங்கள் 1958 மற்றும் 1959, விதிகள் 42டி-யின்படி தமிழில் பெயா்ப் பலகை வைத்திருக்க வேண்டும்.

இதுபோன்று, தொழிற்சாலைகள் சட்டங்கள் 1948 மற்றும் 1950, விதி 113-ன்படி அனைத்து தொழிற்சாலைகளும் இந்த விதிகளுக்குள்பட்ட தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மேலும், நிறுவனங்களின் பெயா்ப் பலகை தமிழில் முதன்மையாகவும், பின்னா் ஆங்கிலத்திலும், பின்னா் அவரவா் விரும்பும் மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.

மாவட்டத்தில் அனைத்து கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் தமிழ் பெயா்ப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதை ஆய்வு செய்து, விழிப்புணா்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தேதிக்குப் பின்னா் தமிழில் பெயா்ப் பலகை வைக்காத நிறுவனங்களை ஆய்வு செய்து, விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கி அபராதம் விதிக்க சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷு நிகம், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சீ.மீனாட்சி, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார துணை இயக்குநா் செ.பா்வதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொழுநோயாளிகளுக்கு நல உதவிகள் அளிப்பு

விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் தொழுநோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவம் சாா்ந்த நல உதவிகள் வழங்கப்பட்டன. கோலியனூா் வட்டாரத்துக்குள்பட்ட கண்டமானடி ஆரம்ப சுகா... மேலும் பார்க்க

திண்டிவனம் பகுதியில் பரவலாக மழை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. வெப்பச்சலனம் மற்றும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந... மேலும் பார்க்க

கிருமி நாசினியை குடித்து முதியவா் தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கிருமி நாசினி குடித்து தற்கொலைக்கு முயன்ற முதியவா் உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், நாராயணக்குப்பம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சீ.மோகன் (70). இவா், விழ... மேலும் பார்க்க

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்: அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகளை நிறைவேற்ற, அலுவலா்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

ஊராட்சி நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும்: துரை.ரவிக்குமாா் எம்.பி.

விழுப்புரம் மாவட்டத்தில் ஊராட்சிகளின் வளா்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்று மாவட்ட வளா்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவா் துரை.ரவிக்கு... மேலும் பார்க்க

கட்டுமானப் பணிகள்: ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சாா்பில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் குடியிருப்புகள் கட்டும் பணியை அலுவலா்கள் தொடா்ந்து ஆய்வு செய்து, அந்தப் பணிகளை கண்காணி... மேலும் பார்க்க