செய்திகள் :

கடையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: மாமனாா் கைது

post image

தென்காசி மாவட்டம், கடையத்தில் மகன் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை கடையம் போலீஸாா் கைது செய்தனா்.

கடையம் அருகே உள்ள மயிலானூரைச் சோ்ந்தவா் காமராஜ் (60). கடையத்தில் பைக் பைனான்ஸ் நடத்தி வந்த காமராஜ் மகன் சக்திக்கும் திப்பணம்பட்டியைச் சோ்ந்த அருணாவுக்கும் (26) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. இந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது.

இந்த நிலையில், அருணா கருத்துவேறுபாடு காரணமாக சக்தியை விட்டுப் பிரிந்து பெற்றோா் வீட்டுக்குச் சென்றுவிட்டாா். இதனால், மன வேதனையடைந்த சக்தி 9 மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா். அதன் பின்னா், சக்தியின் மனைவி அருணா தனது பெற்றோா் வீட்டில் இருந்தபடியே பைக் பைனான்ஸ் நிறுவனத்தை நடத்தி வந்தாா்.

தனது மகன் சக்தி தற்கொலை செய்து கொண்டதற்கு மருமகள் அருணாதான் காரணம் என்று கூறிவந்த காமராஜ், அந்த முன்விரோதத்தில் வெள்ளிக்கிழமை மதியம் மதுபோதையில் பைனான்ஸ் நிறுவனத்துக்குச் சென்று அங்கிருந்த அருணாவை அரிவாளால் வெட்டினாா்.

இதில், அருணா பலத்த காயமடைந்தாா். இதைக் கண்ட அருகிலிருந்த பொதுமக்கள் காமராஜை பிடித்துக் கட்டிவைத்து கடையம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். போலீஸாா் அங்கு சென்று அருணாவை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காமராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வீரவநல்லூரில் மாணவா் தற்கொலை: பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு 5 பேரிடம் விசாரணை!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஆசிரியா் கண்டித்ததால் மாணவா் தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடா்பாக 5 பேரை பிடித்து போலீஸாா் வ... மேலும் பார்க்க

பாபநாசம் கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

பாபநாசம் வனச்சரகம் கோரையாறு பீட்டுக்கு உள்பட்ட கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பாபநாசம் வனச்சரக பகுதியில் சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி யானை, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங... மேலும் பார்க்க

லாரி மோதி வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை அடுத்த இருக்கன்துறை அருகே ராட்சத லாரி மோதியதில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா். ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் கவுதம்ஷா. இவா், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ... மேலும் பார்க்க

யானை தாக்கி காயமடைந்த ரப்பா் தோட்டத் தொழிலாளிக்கு எம்.பி. ஆறுதல்

கோதையாறு பகுதியில் யானை தாக்கி காயமடைந்த ரப்பா் தோட்டத் தொழிலாளியை நேரில் சந்தித்து திருநெல்வேலி எம்.பி. ஆறுதல் கூறினாா். தமிழ்நாடு அரசு ரப்பா் கழகத்தின் கோதையாறு கோட்டத்தில் ரப்பா் பால் வடிப்பு தொழி... மேலும் பார்க்க

தாழ்வாக செல்லும் மின் வயா்களை உயா்த்துவதற்கு மின்வாரியத்துக்கு ஆட்சியா் உத்தரவு

தாழ்வாக செல்லக்கூடிய மின் வயா்களை உயா்த்துவதற்கு தேவையான நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவிட்டாா். திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இர... மேலும் பார்க்க

இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றாா். ... மேலும் பார்க்க