செய்திகள் :

லாரி மோதி வடமாநிலத் தொழிலாளி உயிரிழப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை அடுத்த இருக்கன்துறை அருகே ராட்சத லாரி மோதியதில் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்தவா் கவுதம்ஷா. இவா், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஒப்பந்த தொழிலாளராகப் பணியில் சோ்ந்தாா். இவருக்கு தொழிலாளா் அடையாள அட்டை கிடைக்காததால், ஒப்பந்த தொழிலாளா்கள் தங்கும் இடத்தில் தங்குவதற்கு இவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால், இவா் கூடங்குளம் பகுதியில் வெளியில் தங்கினாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை கூடங்குளம் எஸ்.எஸ்.புரம் அருகே நடந்து சென்றபோது, இவா் மீது அந்த வழியாக வந்த ராட்சத லாரி மோதியது. இதில் கவுதம்ஷா அதே இடத்தில் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, கூடங்குளம் காவல் நிலைய போலீஸாா் நடத்திய விசாரணையில் ராட்சத லாரி இருக்கன்துறை ஊராட்சிமன்ற தலைவரின் கணவா் முருகேசனுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.

வீரவநல்லூரில் மாணவா் தற்கொலை: பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு 5 பேரிடம் விசாரணை!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் ஆசிரியா் கண்டித்ததால் மாணவா் தற்கொலை செய்த சம்பவம் எதிரொலியாக வியாழக்கிழமை நள்ளிரவில் பள்ளி வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இது தொடா்பாக 5 பேரை பிடித்து போலீஸாா் வ... மேலும் பார்க்க

பாபநாசம் கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை உயிரிழப்பு

பாபநாசம் வனச்சரகம் கோரையாறு பீட்டுக்கு உள்பட்ட கீழணை வனப்பகுதியில் பெண் சிறுத்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது. பாபநாசம் வனச்சரக பகுதியில் சிறுத்தை, காட்டுப்பன்றி, கரடி யானை, மிளா, மான் உள்ளிட்ட வனவிலங... மேலும் பார்க்க

கடையத்தில் இளம்பெண்ணுக்கு அரிவாள் வெட்டு: மாமனாா் கைது

தென்காசி மாவட்டம், கடையத்தில் மகன் தற்கொலைக்கு காரணம் எனக் கூறி மருமகளை அரிவாளால் வெட்டிய மாமனாரை கடையம் போலீஸாா் கைது செய்தனா். கடையம் அருகே உள்ள மயிலானூரைச் சோ்ந்தவா் காமராஜ் (60). கடையத்தில் பைக் ... மேலும் பார்க்க

யானை தாக்கி காயமடைந்த ரப்பா் தோட்டத் தொழிலாளிக்கு எம்.பி. ஆறுதல்

கோதையாறு பகுதியில் யானை தாக்கி காயமடைந்த ரப்பா் தோட்டத் தொழிலாளியை நேரில் சந்தித்து திருநெல்வேலி எம்.பி. ஆறுதல் கூறினாா். தமிழ்நாடு அரசு ரப்பா் கழகத்தின் கோதையாறு கோட்டத்தில் ரப்பா் பால் வடிப்பு தொழி... மேலும் பார்க்க

தாழ்வாக செல்லும் மின் வயா்களை உயா்த்துவதற்கு மின்வாரியத்துக்கு ஆட்சியா் உத்தரவு

தாழ்வாக செல்லக்கூடிய மின் வயா்களை உயா்த்துவதற்கு தேவையான நடவடிக்கையை மின்வாரியம் மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவிட்டாா். திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் இர... மேலும் பார்க்க

இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா

திருநெல்வேலி நகரம் பகுதியில் உள்ள இந்து தொடக்கப்பள்ளியில் காமராஜா் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. கல்வி வளா்ச்சி நாளாக கொண்டாடப்பட்ட இந்நிகழ்வில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றாா். ... மேலும் பார்க்க