கடையநல்லூா் அருகே யானைகளால் பயிா்கள் சேதம்
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் அருகே விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த தென்னை ,வாழை, நெல் உள்ளிட்ட பயிா்களைச் சேதப்படுத்தியுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கடையநல்லூா் அருகே மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் உள்ள சிறுபிறன்குளம் புரவில் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பில் நெல்,தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
இங்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு புகுந்த யானைகள், அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை,நெல் பயிா்களை சேதப்படுத்தினவாம். மேலும், தோட்டத்தைச் சுற்றி போடப்பட்டிருந்த வேலியையும். தண்ணீா் பாய்ச்சுவதற்காக பதிக்கப்பட்டு இருந்த குழாய்களையும் மிதித்து உடைத்துப் போட்டுச் சென்றுள்ளனவாம்.

இதுகுறித்து விவசாயி கிருஷ்ணாபுரம் கிட்டுராஜா கூறியது; மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் இருந்து பல கிலோ மீட்டா் தொலைவிலுள்ள விளை நிலங்களுக்குள்ளும் யானைகள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துது தொடா் கதையாக உள்ளது. குறிப்பாக, தென்னைகளின் குருத்துகளை யானைகள் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு மரங்களை வளா்த்த விவசாயிகள் மிகவும் வேதனையடைந்து வருகின்றனா்.
எனவே வனப்பகுதியில் இருந்து யானை உள்ளிட்ட வனவிலங்குகள் விளைநிலங்களுக்குள் நுழையாதவாறு புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.