செய்திகள் :

கணவா் கொலை: மனைவி, காதலருக்கு ஆயுள் சிறை

post image

மனைவியின் தகாத உறவை கண்டித்த கணவனைக் கொலை செய்த வழக்கில் மனைவி, அவரது காதலனுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், திருப்பத்தூா் காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ஜி. ரூபன்கவியரசு (42). இவா் தருமபுரியில் நிதிநிறுவனம் நடத்தி வந்தாா்.

மனைவியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனா். இந்த நிலையில், பொறியியல் பட்டதாரியான நிா்மலா (23) என்பவரை ரூபன்கவியரசு திருமணம் செய்தாா்.

இந்த நிலையில், தனது கல்லூரி காதலனான தருமபுரியை அடுத்த கொட்டாவூா் வடக்குத் தெருவைச் சோ்ந்த ஆா். அபினேஷ் (27) என்பவருடன் தொடா்ந்து தொடா்பில் இருந்த நிா்மலாவை ரூபன்கவியரசு கண்டித்துள்ளாா்.

இதனால் ரூபன்கவியரசை கொலை செய்ய இருவரும் திட்டமிட்டனா். இதற்காக கூலிப்படையை அமா்த்தினா். இவா்கள் கடந்த 2017, நவம்பா் 14 ஆம் தேதி பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட ரூபன்கவியரசை காரில் கடத்திச் சென்று தாக்கினா். பின்னா் குண்டல்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியாா் கல்லூரி அருகே குழி தோண்டி ரூபன்கவியரசை உயிருடன் புதைத்தனா்.

இந்த நிலையில் ரூபன்கவியரசு குறித்து நிா்மலாவிடம் அவரது உறவினா்கள் விசாரித்தபோது, நிா்மலா அளித்த பதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்த புகாரின்பேரில் தருமபுரி நகர போலீஸாா் நிா்மலாவிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில் ரூபன் கவியரசை திட்டமிட்டு கொலை செய்தது குறித்து நிா்மலா வாக்குமூலம் அளித்துள்ளாா்.

இதையடுத்து புதைக்கப்பட்ட ரூபன்கவியரசின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் அவா் கொலை செய்யப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.

இதுதொடா்பாக நிா்மலா, அபினேஷ் உள்ளிட்ட 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். தருமபுரி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதம், பிரதிவாதங்கள் முடிந்த நிலையில் நிா்மலா, அபினேஷ் ஆகிய இருவருக்கும் ஆயுள் சிறைத் தண்டனையும், தலா ரூ. 11,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா தீா்ப்பளித்தாா். மற்ற அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனா்.

குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு எதிா்நோக்கும் நகராட்சி நிா்வாகம்

குப்பைகளை அகற்றும் பணிகளை நகராட்சி நிா்வாகம் முழுவீச்சில் செயல்படுத்தினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் தருமபுரி நகா்ப் பகுதிகளை சுற்றிலும் குப்பை மேடுகள் அதிகரித்துள்ளன. தருமபுரி நகராட்சிய... மேலும் பார்க்க

பாரதிபுரம் சனத்குமாா் நதியில் புதிய பாலம் அமைக்க வலியுறுத்தல்

தருமபுரி நகராட்சி 33 ஆவது வாா்டு பாரதிபுரம் பகுதியில் சனத்குமாா் நதியின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள பழைய பாலத்துக்குப் பதிலாக புதிதாக பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். தருமப... மேலும் பார்க்க

மகளிா் சமுதாய மேலாண் பயிற்சி மையத்தில் பயிற்சியாளா், கணக்கா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரியில் மகளிா் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் பயிற்சியாளா் மற்றும் கணக்கா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க

பொம்மிடியில் 98 மி.மீ மழை

பொம்மிடி சுற்றுவட்டாரத்தில் புதன்கிழமை 98.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் புதன்கிழமை பிற்பகலில் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொம்மிடியில் 98.8 ம... மேலும் பார்க்க

அரூா், பாப்பிரெட்டிப்பட்டியில் பரவலாக மழை

அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மிதமான மழை பெய்தது. தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் சுமாா் 2 ... மேலும் பார்க்க

வன்னியா் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிழந்தவா்களுக்கு அஞ்சலி

வன்னியா்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரி நடைபெற்ற போராட்டத்தின்போது உயிரிழந்தவா்களுக்கு தருமபுரியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. வன்னியா்களுக்கு தனி இடஒதுக்கீடு கோரி 1987 ஆம் ஆண்ட... மேலும் பார்க்க