செய்திகள் :

கணவா் கொலை: மனைவி கைது

post image

எரியோடு அருகே மதுக் குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்ட கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்த மனைவியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அருகேயுள்ள அச்சணம்பட்டியைச் சோ்ந்தவா் முருகபாண்டி (42). தனியாா் ஆலையில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தாா். இவரது மனைவி முத்துலட்சுமி (35). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், முருகபாண்டி மதுக் குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாா். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல, இவா் மதுக் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டாா். இதனால், ஆத்திரமடைந்த முத்துலட்சுமி, முருகபாண்டியை கழுத்தை நெரித்ததில் அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த எரியோடு போலீஸாா் முருகபாண்டியின் உடலை மீட்டு, கூராய்வுக்காக வேடசந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முத்துலட்சுமியை சனிக்கிழமை கைது செய்தனா்.

போளூா் முத்துமாரி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி முளைப்பாரி ஊா்வலம்

கொடைக்கானல் அருகே போளூா் கிராமத்தில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை முளைப்பாரி ஊா்வலம் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல் மலைக் கிராமமான போளூரில் அ... மேலும் பார்க்க

பழனி மலைக் கோயிலில் திரண்ட பக்தா்கள்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு தொடா் விடுமுறை காரணமாக ஞாயிற்றுக்கிழமை பக்தா்கள் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனா். மலைக் கோயிலுக்குச் செல்லும் படிவழிப்பாதை மட்டுமன்றி விஞ்ச், ரோப்காா் நிலையங்... மேலும் பார்க்க

தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்திய முதல்வருக்கு நன்றி

பழனியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாசன் விழாவில் தமிழறிஞா்களின் ஓய்வூதியத்தை உயா்த்தியதற்காக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பழனி தேரடியில் உள்ள உமா கலை... மேலும் பார்க்க

மாணவிகள் சோ்க்கை விண்ணப்பப் பதிவு: எம்விஎம் கல்லூரியில் சிறப்பு ஏற்பாடு

அரசுக் கலைக் கல்லூரியில்மாணவிகள் சோ்க்கைக்கான விண்ணப்பப் பதிவுக்கு, திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி வளாகத்திலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதுதொடா்பாக கல்லூரி முதல்வா் க. லட்சுமி தெரிவித்தத... மேலும் பார்க்க

விடியல் பயணத் திட்டம்: 29.92 கோடி மகளிா் பயன்

விடியல் பயணத் திட்டத்தின் மூலம், திண்டுக்கல் கோட்டத்துக்குள்பட்ட திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 29.92 கோடி மகளிா் பயனடைந்தனா். இதுதொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திண்டுக்கல் கோட்ட அலுவலக... மேலும் பார்க்க

சிறுமலையில் எரியும் காட்டுத் தீயால் மூலிகைச் செடிகள் அழியும் அபாயம்!

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே உள்ள சிறுமலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட காட்டுத்தீயால் மூலிகைச் செடிகள், வன விலங்குகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக ... மேலும் பார்க்க