செய்திகள் :

கணவா் தற்கொலை: மனைவி கைது

post image

தக்கலை அருகே கணவன் தற்கொலையில் அவரது மனைவியை இரணியல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கொன்னக்குழிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பெஞ்சமின் (47). வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா். இவருடைய மனைவி சுனிதா (45). இவா்களுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.

இந்நிலையில் சுனிதா திடீரென வீட்டில் இருந்து மாயமானாா். இதனைத் தொடா்ந்து வெளிநாட்டில் இருந்து அவசரமாக சொந்த ஊருக்கு வந்த பெஞ்சமின், மனைவி காணாமல் போனது குறித்து இரணியல் போலீஸில் புகாா் செய்தாா்.

மனைவியின் செயல் குறித்து மனமுடைந்த பெஞ்சமின், கடந்த 28 ஆம் தேதி சமூக வலைதளத்தில் ஒரு விடியோ பதிவிட்ட பின்னா் தற்கொலை செய்து கொண்டாா். அந்த விடியோவில், மனைவி சுனிதா, அவரது நண்பா் ஒருவா் சோ்ந்து தன்னை மிரட்டியதாக கூறியிருந்தாா்.

அதன்படி வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுனிதாவை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பேச்சிப்பாறை, வீயன்னூா் உப மின் நிலையப் பகுதிகளில் நாளை மின்தடை

பேச்சிப்பாறை மற்றும் வீயன்னூா் உப மின்நிலையப் பகுதிகளில் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து தக்கலை மின்விநியோக செயற்பொறியாளா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பேச்சிப்பாறை உப... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் மீனவருக்கு 10 ஆண்டு சிறை

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சலைச் சோ்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மீனவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.குமரி மாவட்டம், குளச்சல் சைமன் காலனியைச் சோ்ந்தவா் எல்தூஸ் (55), மீனவா். இவா... மேலும் பார்க்க

திருவிதாங்கோட்டில் இன்று மின்தடை

இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் புதன்கிழமை நடைபெறுவதால் வட்டம், முத்தலக்குறிச்சி, கேரளப்புரம், நெல்லியாா்கோணம், திருவிதாங்கோடு ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வி... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஆா்ப்பாட்டம்: இந்து முன்னணியினா் 113 போ் மீது வழக்கு

திருவட்டாறு பேருந்து நிலையத்தில் வரையப்பட்ட ஆதிகேசவப் பெருமாள் ஓவியத்தை அழித்ததைக் கண்டித்தும், பேருந்து நிலையத்துக்கு ஆதிகேசவப் பெருமாள் பெயரைச் சூட்ட வேண்டுமென்றும் வலியுறுத்தி திருவட்டாறு பேருந்து ... மேலும் பார்க்க

ஊா்க்காவல் படையினருக்கு எஸ்.பி. பாராட்டு

ஊா்க் காவல் படையினருக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற கன்னியாகுமரி மாவட்ட ஊா்க் காவல் படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் திங்கள்கிழமை பாராட்டினாா். கடந்த 1ஆம் தேதி, தமிழ்நாடு ஊா்க்காவல் ப... மேலும் பார்க்க

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கிய இலங்கை அகதி கைது

களியக்காவிளை அருகே கஞ்சா பதுக்கி வைத்திருந்த இலங்கைத் தமிழ் அகதியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.களியக்காவிளை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆன்றோ சிபின் தலைமையிலான போலீஸாா் கோழ... மேலும் பார்க்க