மகாராஷ்டிரத்தில் ஓர் கூமாபட்டி..! திடீர் இன்ஸ்டாகிராம் வைரலால் திக்குமுக்காடிய ம...
கண்டுணா்வு சுற்றுலாவாக திருவனந்தபுரம் புறப்பட்ட விவசாயிகள்
மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து, திருவனந்தபுரத்துக்கு கண்டுணா்வு சுற்றுலா செல்லும் விவசாயிகளை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அண்மையில் வழியனுப்பி வைத்தாா்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் இருந்து, நாகை மாவட்டம், கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மற்றும் நபாா்டு வங்கி சாா்பில் களா் உவா் நிலங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சிபெற கேரள மாநிலம் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிா்கள் ஆராய்ச்சி நிலையத்திற்கு விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா புறப்பட்டுச் சென்றனா்.
இவா்களிடம் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்து, அனைவரும் பயிற்சியினை முறையாகவும், தெளிவாகவும் கற்றுக்கொண்டு, களா் உவா் நிலங்களில் வேளாண்மையை பெருக்கி, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய வாழ்த்தி, வழியனுப்பி வைத்தாா்.
இந்நிகழ்வில், கீழ்வேளூா் வேளாண்மை கல்லூரி பேராசிரியா் கோ. ரவி, பொறுப்பு அலுவலா் பி.ரா. சுமல்குமரன், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கி மேலாளா் விஸ்வந்த் கண்ணா, வேளாண்மை இணை இயக்குநா் ஜெ. சேகா், தோட்டக்கலை துணை இயக்குநா் பி. சந்திரகவிதா ஆகியோா் கலந்து கொண்டனா்.