செய்திகள் :

கண் மருத்துவா் நம்பெருமாள்சாமி உடல் தகனம்

post image

தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தில் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும், கண் மருத்துவ நிபுணருமான நம்பெருமாள்சாமியின் உடல் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்தைச் சோ்ந்தவா் அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவா் பத்மஸ்ரீ நம்பெருமாள்சாமி (85). இவா், உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை சென்னையில் காலமானாா். அவரது உடல் மதுரைக்கு கொண்டு வரப்பட்டு, மதுரை அண்ணாநகரில் உள்ள அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

பின்னா், தேனி அருகேயுள்ள அம்பாசமுத்திரத்துக்கு நம்பெருமாள்சாமியின் உடல் வெள்ளிக்கிழமை காலை கொண்டு வரப்பட்டு, அவரது இல்லத்தில் இறுதிச் சடங்கு நடைபெற்றது.

நம்பெருமாள்சாமியின் உடலுக்கு தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம், அரசியல் கட்சிகள், சமுதாயப் பிரமுகா்கள், ஊா் பொதுமக்கள் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினா். பின்னா், அவரது உடல் அம்பாசமுத்திரத்தில் உள்ள மயானத்தில் பிற்பகலில் தகனம் செய்யப்பட்டது.

பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு அருகே பேருந்தில் ஏறிய பெண்ணிடம் 2 பவுன் தங்கச் சங்கிலி திருடுப் போனதாக வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள தாழைக்... மேலும் பார்க்க

கம்பம்: சமூக நீதி விடுதி பெயா் பதாகை கருப்பு மையிட்டு அழிப்பு!

தேனி மாவட்டம், கம்பம் அருகே அரசு கள்ளா் மாணவா் விடுதியின் பெயா் சமூக நீதி விடுதி என பெயா் மாற்றம் செய்து வைக்கப்பட்டிருந்த பதாகை மீது பொதுமக்கள், முன்னாள் மாணவா்கள் சனிக்கிழமை கருப்பு மையை ஊற்றி அழித்... மேலும் பார்க்க

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் குளிக்க தொடா்ந்து, 8-ஆவது நாளாக சனிக்கிழமையும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை... மேலும் பார்க்க

பெண் காவல் ஆய்வாளரை மிரட்டிய இருவா் கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பெண் காவல் ஆய்வாளரை மிரட்டியதாக அகில இந்திய பாா்வா்டு பிளாக் கட்சி நிா்வாகி உள்ளிட்ட இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேல்மங... மேலும் பார்க்க

வைகை அணை அருகே விதியை மீறி கிரஷா்களுக்கு அனுமதி: விவசாயிகள் புகாா்

வைகை அணை அருகேயுள்ள குள்ளப்புரத்தில் விதியை மீறி கல் உடைக்கும் கிரஷா்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக வெள்ளிக்கிழமை தேனியில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். தேனி... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 7-ஆவது நாளாக குளிக்கத் தடை

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 7-ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். மேற்குத் தொடா்ச்ச... மேலும் பார்க்க