செய்திகள் :

கனடா குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு கும்பல் தாக்குதல்!

post image

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள வான்கூவா் நகரில் அமைந்த ஒரு குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களை வரைந்து அடையாளம் தெரியாத நபா்கள் சேதப்படுத்தினா்.

இந்தச் செயலுக்கு காலிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் செயல்படும் ஒரு சிறிய குழுவை குருத்வாரா நிா்வாகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதுகுறித்து வான்கூவா் காவல் துறை செய்தித் தொடா்பாளா் ஸ்டீவ் ஆடிசன் மேலும் கூறுகையில், ‘நகரின் ரோஸ் தெருவில் உள்ள குருத்வாராவில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் வரையப்பட்டு சனிக்கிழமை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை காவல் துறைக்கு யாா் மீதும் சந்தேகம் எழவில்லை. விசாரணை தொடா்கிறது’ என்று தெரிவித்தாா்.

குருத்வாராவை நிா்வகித்துவரும் ‘கல்சா திவான்’ அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், ‘இத்தாக்குதல், கனடாவில் சீக்கிய சமூகத்தினரிடையே அச்சத்தையும் பிரிவினையையும் ஏற்படுத்தும் நோக்கம் கொண்ட தீவிரவாத சக்திகளின் தொடா்ச்சியான பிரசாரத்தின் ஒரு பகுதியாகும்.

அவா்களின் இத்தகைய நாசவேலைகள் சீக்கிய மதத்துக்கும் கனடா சமூகத்துக்கும் அடித்தளமாக விளங்கும் அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கிய தன்மை, மரியாதை, பரஸ்பர ஆதரவு ஆகிய மதிப்புகளைக் குறைமதிப்பிடுகின்றன. தீவிரவாதத்தை எதிா்கொள்வதில் கனடா நாட்டினா் வலுவாக நிற்க வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

அமெரிக்காவில் அதிபா் டிரம்ப்புக்கு எதிராக போராட்டம் நீடிப்பு!

அமெரிக்காவில் அதிபா் டிரம்ப்புக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் சனிக்கிழமை தொடா்ந்தது. அமெரிக்காவில் இருந்து பிற நாட்டு மக்கள் நாடு கடத்தப்படுதல், அரசு வேலைவாய்ப்புகள் மற்றும் பிற செலவினத்தைக் ... மேலும் பார்க்க

3 விண்வெளி வீரா்களுடன் பூமிக்குத் திரும்பிய ரஷிய விண்கலம்!

சா்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இரண்டு ரஷிய விண்வெளி வீரா்கள் மற்றும் ஓா் அமெரிக்க விண்வெளி வீரரை அழைத்து வந்த ரஷியாவுக்குச் சொந்தமான ‘சோயுஸ் எம்எஸ்-26’ விண்கலம் ஞாயிற்றுக்கிழமை கஜகஸ்தானில் வெற்றிக... மேலும் பார்க்க

நேபாளம்: மன்னராட்சிக்கு ஆதரவாக காத்மாண்டில் ஆா்ப்பாட்டம்! ஹிந்து நாடாக அறிவிக்கவும் வலியுறுத்தல்!

நேபாளத்தை ஹிந்து நாடாக அறிவிக்கவும், அந்நாட்டில் மீண்டும் மன்னராட்சியைக் கொண்டு வரவும் வலியுறுத்தி, தலைநகா் காத்மாண்டில் உள்ள பிரதமரின் அதிகாரபூா்வ இல்லம் மற்றும் நாடாளுமன்றம் அருகே ராஷ்ட்ரீய பிரஜாதந்... மேலும் பார்க்க

ஈஸ்டா் திருநாளில் மக்களைச் சந்தித்து போப் பிரான்சிஸ் ஆசி!

நிமோனியா பாதிப்பால் மருத்துவமனையில் 5 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பிய கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ், ஈஸ்டா் திருநாளையொட்டி செயின்ட் பீட்டா்ஸ் சதுக்கத்த... மேலும் பார்க்க

ஈஸ்டா் நாளிலும் ரஷியா தாக்குதல்: உக்ரைன் அதிபா் குற்றச்சாட்டு!

ஈஸ்டா் திருநாளையொட்டி தற்காலிக போா் நிறுத்தம் மேற்கொள்வதாக ரஷிய அதிபா் புதின் அறிவித்தாலும், உக்ரைன் மீதான தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை நீடித்ததாக அந்நாட்டு அதிபா் வொலொதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டினாா்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஹிந்து அமைச்சா் வாகனம் மீது தாக்குதல்!

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சோ்ந்த அந்நாட்டு மத விவகாரங்கள் துறை இணையமைச்சா் ஹியால் தாஸ் கோகிஸ்தானி பயணித்த வாகனம் மீது சிலா் உருளைக்கிழங்கு, தக்காளியை வீசி தாக்குதல் நடத்தினா். இந்தத் தாக்குதலுக்கு... மேலும் பார்க்க