செய்திகள் :

கனடா தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும்: உளவுத்துறை

post image

கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் இந்தியாவும் சீனாவும் தலையிட முயற்சிக்கும் என்று அந்நாட்டின் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கனடா நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைத்த அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னி, வருகின்ற ஏப்ரல் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

இந்த நிலையில், தேர்தல் குறித்து அந்நாட்டு உளவுத் துறையின் துணை இயக்குநர் வனேசா லாயிட் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

“தேர்தல் நடைமுறைகளில் தலையிட அரசுக்கு எதிரானவர்கள் செய்யறிவை அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்திய அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கை மேலும் வலுப்படுத்த, கனட ஜனநாயக செயல்முறைகளில் தலையிடுவதற்கான நோக்கத்தையும் திறனையும் கொண்டுள்ளதை நாங்கள் கண்டறிந்துள்ளோம்.

குறிப்பாக கனடாவின் தேர்தலில் செய்யறிவு கருவிகளை பயன்படுத்த சீன அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. கனடாவில் உள்ள சீன இன, கலாச்சார மற்றும் மத சமூகங்களைக் குறிவைத்து அவர்களுக்கு உடன்படுபவர்களுக்கு ஆதரவான கதைகளை சமூக ஊடகங்கள் மூலம் சீனா பரப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ரஷியாவும் பாகிஸ்தானும் கனடா தேர்தலில் தலையிட வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலிலும் இந்தியா, சீனா தலையிட முயற்சித்தது. ஆனால், எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க : கனடாவில் தேர்தல்: பதவியேற்ற 10 நாள்களில் நாடாளுமன்றத்தை கலைத்த பிரதமர்!

கடந்த கனடா தேர்தலில் தலையிட்டதாக எழுந்த குற்றச்சாட்டை ஏற்கெனவே இந்தியாவும் சீனாவும் மறுத்துள்ளது. புதிய குற்றச்சாட்டு தொடர்பாக இரு நாடுகளும் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜரின் கொலை வழக்கில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த 2023 இல் எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பிறகு இருநாட்டின் உறவில் விரிசல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அமைதிக்கான நோபல் பரிசு: இம்ரான் கான் பெயர் பரிந்துரை!

அமைதிக்கான நோபல் பரிசுக்கு சிறையிலுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (72) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.பாகிஸ்தானில் மனித உரிமைகளைக் காப்பதற்கும் ஜனநாயகத்தை நிலைநாட்டவும் மேற்கொண்ட நடவட... மேலும் பார்க்க

அமெரிக்கா எச்சரிக்கை! தயார் நிலையில் ஈரான் ஏவுகணைகள்!

டிரம்ப் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஈரான் ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வரம்புகள் கொண்ட அணு ஆயுதத் திட்டங்கள் தொடர்பான புதிய ஒப்பந்தத்திற்கு ஈரான் அரசு ஒப்... மேலும் பார்க்க

மியான்மர் நிலநடுக்கம்: தொழுகையில் இருந்த 700 முஸ்லீம்கள் பலி!

மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின்போது மசூதிகளில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லீம்கள் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமா... மேலும் பார்க்க

வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும்: ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்!

அணு ஆயுதத் திட்டம் தொடர்பான அமெரிக்காவின் ஒப்பந்தத்திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் அவர்கள்மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். ஈரானின் அணு ஆயுதத் திட்டங்களைக... மேலும் பார்க்க

ரஷிய அதிபா் புதினை கொல்ல சதியா? காா் வெடித்து தீப்பற்றியதால் பரபரப்பு!

ரஷிய அதிபா் புதின் பயன்படுத்தும் காா் திடீரென வெடித்து தீப்பற்றியது. இது அதிபா் விளாதிமீா் புதினை கொல்வதற்கான சதியா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. காா் தீப்பற்றியபோது அதில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு... மேலும் பார்க்க

பாகிஸ்தான் ராணுவம் ட்ரோன் தாக்குதல்: 12 பயங்கரவாதிகள், 9 பொதுமக்கள் உயிரிழப்பு!

பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய ட்ரோன் (ஆளில்லாத சிறிய ரக விமானம்) தாக்குதலில் 12 பயங்கரவாதிகளும், 9 பொதுமக்களும் உயிரிழந்தனா். பாகிஸ்தானின் பலூசிஸ்தான், கைபா் பக்... மேலும் பார்க்க