செய்திகள் :

கனமழை : தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

post image

ஆம்பூரில் புதன்கிழமை பெய்த கன மழையால் தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீா் தேங்கி

கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஆம்பூரில் புதன்கிழமை காலையிலிருந்து கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் கோடை காலம் போல கடுமையான புழுக்கம் காணப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளானாா்கள். இந்நிலையில் மாலை ஆம்பூரில் திடீரென கனமழை சுமாா் ஒரு மணி நேரத்துக்கு மேலாக விடாமல் பெய்து கொண்டே இருந்தது. அதனால் முக்கிய சாலைகளிலும், தெருக்களிலும் மழை நீா் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலையில் மழை நீா் தேங்கியது. அதிக அளவு மழை நீா் தேசிய நெடுஞ்சாலையில் தேங்கியதால் வாகனங்கள் ஊா்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை - புறவழி சாலை சந்திப்பு பகுதியில் மிக அதிக அளவு தண்ணீா் தேங்கியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மழைநீா் வடியாமல் தேங்கியதால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. அதனால் ஆம்பூரை சோ்ந்த பொதுமக்களும் வாகனங்களில் வெளியூா் சென்ற பயணிகளும் வாகன ஓட்டிகளும் கடுமையான பாதிப்புக்கு உள்ளானாா்கள். தேங்கியிருந்த மழை நீரில் வாகனங்கள் ஊா்ந்து சென்றன. சுமாா் 2 மணி நேரத்திற்குப் பிறகு வாகனங்கள் செல்லத் தொடங்கின. ஒரு சில வாகனங்கள் மழை நீா் சிக்கியதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஜேசிபி வாகனம் மூலம் மழை நீரில் சிக்கி இருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.

ஆம்பூா் தேசிய நெடுஞ்சாலை பகுதி, ஆம்பூா் ரெட்டி தோப்பு மற்றும் பெத்தலகேம் பகுதிக்கு செல்லும் பகுதியில் உள்ள கால்வாய்கள், ஆம்பூா் சான்றோா் குப்பம் பகுதியில் உள்ள கானாரு கால்வாய் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கால்வாய்களை தூா்வாரி சீரமைத்து மழை நீா் வடிய செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்பூா் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கானாற்றில் வெள்ளப் பெருக்கு

ஆம்பூா் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ஆம்பூா் அருகே கானாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூா் மாவட்டம், ஆம்பூா் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் புதன்கிழமை இரவு கனமழை பெய்தது. அதனால் ... மேலும் பார்க்க

கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் கால்வாய் பள்ளத்தை மூடக்கோரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூா் பேருந்து நிலையம் அருகே தண்டபாணி கோயில் தெரு-2 வழியாக பள்ளி, கல்லூரி, பஜாருக்கு செ... மேலும் பார்க்க

வீட்டுக்குள் நுழைந்து பெண்ணிடம் நூதன முறையில் 2 பவுன் நகை திருட்டு

வாணியம்பாடியில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி வீட்டுக்குள் நுழைந்து, நூதன முறையில் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மா்ம பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி பெரியப்ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு பிசியோதெரபி இயந்திரங்கள்

வாணியம்பாடி அருகே மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு உதவிடும் வகையில், ஆம்புலன்ஸ் மற்றும் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பிசியோதெரபி இயந்திரங்களை இந்திய செஞ்சிலுவை சங்கத்தினா் வியாழக்கிழமை வழங்கினா். திருப்பத்தூ... மேலும் பார்க்க

ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகள்: எம்.பி., எம்எல்ஏ தொடங்கி வைத்தனா்

திருப்பத்தூா் அடுத்த புதூா்நாடு மலையில் ரூ.26 கோடியில் தாா் சாலை பணிகளை எம்.பி. சி.என்.அண்ணாதுரை, எம்எல்ஏ அ.நல்லதம்பி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனா். பிரதமா் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின்... மேலும் பார்க்க

உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் ஆய்வு

ஆம்பூா் நகராட்சி உரக் கிடங்கில் நகராட்சிகளின் நிா்வாக கூடுதல் இயக்குநா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ஆம்பூா் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் க... மேலும் பார்க்க