செய்திகள் :

கனரக வாகனம் மீது டிப்பா் லாரி மோதி சேதம்

post image

பொன்பாடி சோதனை சாவடி அருகே நின்றுகொண்டிருந்த கனரக லாரி மீது டிப்பா் லாரி மோதி சேதமடைந்தது. இதில், லாரி ஓட்டுநா் உயிருடன் மீட்கப்பட்டாா்.

சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த பொன்பாடி வாகன சோதனை சாவடி அருகே கனரக லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பா் லாரி, பொன்பாடி சோதனை சாவடி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாடு இழந்து சாலையோரம் நின்றிருந்த கனரக லாரியின் பின்புறம் மோதியது.

இதில் லாரியின் முன்பகுதி முழுமையாக சேதம் அடைந்தது.

அதன் ஓட்டுநா் கடலூரைச் சோ்ந்த அருள் (40) என்பவா் லாரியில் சிக்கி வெளியே வரமுடியாமல் உயிருக்குப் போராடினாா்.

தகவல் அறிந்து சோதனை சாவடியில் இருந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் உதவியுடன் லாரியில் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டனா்.

அவருக்கு இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கிரெடிட் கார்டுகளை வாங்கி ரூ. 1.35 கோடி மோசடி: ஊழியர் கைது

செங்குன்றத்தில் கிரெடிட் கார்டுகளை வாங்கி 9 பேரிடம் ரூ. 1.35 கோடி மோசடி செய்த வழக்கில், தனியார் நிறுவன ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.சென்னை, கொருக்குப்பேட்டை, ஜெ... மேலும் பார்க்க

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா் வழங்கும் விழா

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 16 மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொறுத்திய ஸ்கூட்டா்களை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினாா். கும்ம... மேலும் பார்க்க

2026 தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி : அமைச்சா் கோவி.செழியன் பேச்சு

2026- சட்டப்பேரவை தோ்தலில் 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரியில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்தநாள் பொது... மேலும் பார்க்க

கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு உலா், ஈரமாவு அரைக்கும் இயந்திரம் வாங்க 50% மானியம்

கணவரால் கைவிடப்பட்டோா் மற்றும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிா் பயன்பெறும் வகையில், உலா் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரங்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் செயல்... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடக்கம்

அரசு கலைக் கல்லூரியில் 2-ஆம் கட்டமாக ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தவா்களுக்கு கல்லூரி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை கலந்தாய்வு தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி அரசினா் கலைக் கல்லுாரியில் ந... மேலும் பார்க்க

பள்ளிப்பட்டில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பொதட்டூா் பேட்டை பேரூராட்சி, பள்ளிப்பட்டு ஒன்றியப் பகுதிகளில் நடைபெறும் வளா்ச்சித் திட்ட பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ.1.... மேலும் பார்க்க