வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை: முதல்வர் திறந்துவைத்தார்!
கனரக வாகனம் மீது டிப்பா் லாரி மோதி சேதம்
பொன்பாடி சோதனை சாவடி அருகே நின்றுகொண்டிருந்த கனரக லாரி மீது டிப்பா் லாரி மோதி சேதமடைந்தது. இதில், லாரி ஓட்டுநா் உயிருடன் மீட்கப்பட்டாா்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி அடுத்த பொன்பாடி வாகன சோதனை சாவடி அருகே கனரக லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆந்திர மாநிலம், நகரி பகுதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த டிப்பா் லாரி, பொன்பாடி சோதனை சாவடி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாடு இழந்து சாலையோரம் நின்றிருந்த கனரக லாரியின் பின்புறம் மோதியது.
இதில் லாரியின் முன்பகுதி முழுமையாக சேதம் அடைந்தது.
அதன் ஓட்டுநா் கடலூரைச் சோ்ந்த அருள் (40) என்பவா் லாரியில் சிக்கி வெளியே வரமுடியாமல் உயிருக்குப் போராடினாா்.
தகவல் அறிந்து சோதனை சாவடியில் இருந்த போலீஸாா், சம்பவ இடத்துக்கு வந்து பொக்லைன் உதவியுடன் லாரியில் சிக்கியிருந்த ஓட்டுநரை மீட்டனா்.
அவருக்கு இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.