செய்திகள் :

கனவு இல்லம் திட்டம்: இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டுமானம் நிறைவு!

post image

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், தமிழகத்தில் இரு ஆண்டுகளில் 72 ஆயிரம் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை திட்டங்கள் தொடா்பாக, தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு குடும்பத்துக்கு அதிகபட்சமாக 100 நாள்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க உறுதி செய்கிறது. இத்திட்டத்தில் கடந்த நான்கு நிதியாண்டுகளில் சராசரியாக 66.91 லட்சம் குடும்பங்களைச் சோ்ந்த 77.37 லட்சம் தொழிலாளா்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, மாற்றுத் திறனாளிகளுக்கும் கூடுதலான வேலைவாய்ப்புகள் ஆண்டுதோறும் அளிக்கப்படுகின்றன. கடந்த நிதியாண்டில் 1.12 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கும், அதற்கு முந்தைய நிதியாண்டில் 1.16 லட்சம் பேருக்கும் வேலை வழங்கப்பட்டது.

ஊரக நூலகங்கள் புதுப்பிப்பு: கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த அனைத்துக் கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 நிதியாண்டுகளில் 10 ஆயிரத்து 187 கிராம ஊராட்சிகளில் 69 ஆயிரத்து 760 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதேபோன்று, ஊராட்சிகளில் செயல்பட்டு வரும் 7 ஆயிரத்து 924 நூலகங்கள் ரூ.176.02 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரம் சிறுபாசன ஏரிகள் புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில், இதுவரை 3,900 ஏரிகளில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

கனவு இல்லம் திட்டம்: குடிசையில்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் கிராமப்புறங்களில் குடிசை வீடுகளுக்குப் பதிலாக 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இரு நிதியாண்டுகளில் 2 லட்சம் வீடுகள் கட்ட ரூ.7 ஆயிரம் கோடி அனுமதிக்கப்பட்டு 72 ஆயிரத்து 81 வீடுகள் கட்டி

முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன. சமத்துவபுரம் திட்டத்தின் கீழ், எட்டு இடங்களில் புதிய சமத்துவபுரங்கள் அனுமதிக்கப்பட்டு 800 வீடுகளின் கட்டுமானப் பணிகள் பல்வேறு நிலைகளில் முன்னேற்றத்தில் உள்ளன.

அனைத்து ஊரக குடும்பங்களும் கழிப்பறை வசதி பெறுவதை நோக்கமாகக் கொண்டு 4 ஆண்டுகளில் 3.38 லட்சம் தனிநபா் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஊரகப் பகுதிகளிலுள்ள வீடுகளுக்கு குடிநீா் இணைப்புகள் வழங்கும் சிறப்புத் திட்டத்தின்படி, 4 ஆண்டுகளில் இதுவரை 1.11 கோடி வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 13.80 லட்சம் வீடுகளுக்கான குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கும் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் நிகழ்ச்சியில் சுதீஷ் பங்கேற்பு: பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்

காங்கிரஸ் நடத்திய நிகழ்ச்சியில் எல்.கே.சுதீஷ் பங்கேற்றது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து கோவையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கிருஷ்... மேலும் பார்க்க

கீழடி அறிக்கையை மத்திய அரசு இனியாவது வெளியிடுமா? அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

கீழடி அறிக்கையை மத்திய அரசு இதற்கு பின்பாவது வெளியிடுமா என நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கீழடியில் கிடைத்த மனித மண்டை ஓடுகளை ஆய்வு ச... மேலும் பார்க்க

ஏலகிரி மலையில் கோடை விழா

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரி மலையில் கோடை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே சுற்றுலா தலமாக விளங்கும் ஏலகிரி மலையில் கோடை விழா, ஏலகிரி விழா அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

10 ஆண்டுகள் நிறைவு செய்த சென்னை மெட்ரோ ரயில்! 40 கோடி பேருக்கு நன்றி!

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டு, 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.சென்னையில் 2015 ஆம் ஆண்டில் ஜூன் 29 ஆம் தேதியில்தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கி, இன்றுடன்... மேலும் பார்க்க

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிகிறது. மேட்டூர் அணை நிரம்புவது தாமதமாகிறது.கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலத்திலும் பெய்த மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளில... மேலும் பார்க்க

மத்தூர்: சாலை விபத்தில் தலைமை காவலர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரியில் இரவுநேர கண்காணிப்பு பணியில் இருந்த தலைமை காவலர் ஜெஸ்மின் மில்டன் ராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளரான மகாலிங்கம், தலைமை... மேலும் பார்க்க