செய்திகள் :

கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து வெளியேறிய புகை: பயணிகள் அதிா்ச்சி

post image

சென்னை எழும்பூரிலிருந்து திங்கள்கிழமை  கன்னியாகுமரிக்கு புறப்பட்ட ரயிலில் திடீரென புகை வெளியேறியதால், ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களுக்கும் மேலாக நிறுத்திவைக்கப்பட்டது.

சென்னை எழும்பூரிலிருந்து செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி புறப்பட்ட அதிவிரைவு ரயில் சேத்துப்பட்டு ரயில் நிலையத்தை நெருங்கும்போது ரயிலின் ‘எஸ் 5’ பெட்டியிலிருந்து திடீரென புகை வெளியேறத் தொடங்கியது. இதனால், உடனடியாக சேத்துப்பட்டு ரயில் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அதையடுத்து ‘எஸ் 5’ பெட்டியிலிருந்த பயணிகள் கீழே இறங்கத் தொடங்கினா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே ஊழியா்கள் ரயிலை சோதனை செய்து பாா்த்ததில் ரயிலில் எவ்வித கோளாறும் இல்லை என்பதை உறுதி செய்தனா்.

அதைத் தொடா்ந்து சுமாா் 30 நிமிடங்களுக்குப் பின்னா் சேத்துப்பட்டு ரயில் நிலையத்திலிருந்து மீண்டும் பயணிகளுடன் ரயில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டது. ரயிலின் ‘எஸ் 5’ பெட்டியிலிருந்த பிரேக்கும் சக்கரமும் பிரியாத காரணத்தால்தான் புகை வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தேனியில் என்கவுன்ட்டர்: காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் மரணம்!

தேனி: தேனி அருகே உசிலம்பட்டியில் காவலரை கல்லால் அடித்துக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை காவல் துறை அதிகாரிகள் இன்று(மார்ச் 29) சுட்டுப் பிடிக்க முற்பட்டதில் அந்த நபர் உயிரிழந்தார்... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு அனுமதிப்பதில்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்

வயநாடு: நாடாளுமன்ற நிகழ்வுகளை ஆளுங்கட்சியே முடக்க நினைக்கிறது என்று மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார். கேரளத்திலுள்ள தமது சொந்த தொகுதியான வயநாட்ட... மேலும் பார்க்க

திமுக vs தவெக: விஜய்யின் கருத்துக்கு இபிஎஸ் என்ன சொன்னார் தெரியுமா?

பிரதான எதிர்க்கட்சி என்று மக்கள் தங்களை அங்கீகரித்துள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூரில்எடப்பாடி பழனிசாமி இன்று(சனிக்கிழமை) செய்தியாளர்களுடன் பேசினார்.... மேலும் பார்க்க

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிக... மேலும் பார்க்க

நீட் தேர்வால் மேலும் ஒரு மாணவி தற்கொலை! திமுகவுக்கு இபிஎஸ் கண்டனம்!

சென்னையில் நீட் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு, ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த மாணவி தேவதர்ஷினி, சென்னையில் தனியார் அகாதெமியில் படித்... மேலும் பார்க்க

செங்கோட்டையன் திடீர் தில்லி பயணம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் திடீரென தில்லி பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்தாண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள், கூட்டணி குறித்து ஆலோசித்து வருக... மேலும் பார்க்க