செய்திகள் :

கன்னிவாடி அருகே பிடிபட்ட முள் எலி

post image

கன்னிவாடியை அடுத்த உலகம்பட்டியில் பிடிபட்ட அபூா்வ முள் எலியை வனத் துறையினா் திங்கள்கிழமை வனப் பகுதியில் விடுவித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரக நிா்வாக எல்லைக்குள்பட்ட உலகம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் முள் எலி இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ராஜ்குமாா் உத்தரவின் பேரில், வனச் சரக அலுவலா் குமரேசன் தலைமையில் வனவா் பீட்டா் ராஜா, வனக் காப்பாளா் கல்யாணி உள்ளிட்ட வனக் காவலா்கள் அந்த முள் எலியை மீட்டனா்.

இதையடுத்து, கன்னிவாடி அரசு கால்நடை உதவி மருத்துவா், அந்த முள் எலிக்கு சிகிச்சை அளித்தாா். பிறகு அது கன்னிவாடி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

மா கொள்முதல் விலையை உயா்த்தக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் மாம்பழத்தை வீசி விவசாயிகள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு த... மேலும் பார்க்க

49 ஆண்டுகளுக்கு முன் ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரிக்கை

கடந்த 49 ஆண்டுகளுக்கு முன் 22 பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனைகளுக்கு பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு 48-ஆவது வாா்டுக்கு... மேலும் பார்க்க

வேடசந்தூா் பகுதியில் நாளை மின்தடை

வேடசந்தூா் பகுதியில் புதன்கிழமை (ஜூன் 11) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேடசந்தூா் துணை மின் நிலையத்த... மேலும் பார்க்க

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

நில ஆக்கிரமிப்பு தொடா்பாக புகாா் அளிக்க வந்த பெண் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். திருச்சி காந்திபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம். இவரத... மேலும் பார்க்க

பொதுப் பாதை ஆக்கிரமிப்பு: மீட்டுத் தரக் கோரிக்கை

பொதுப் பாதையை பயன்படுத்த மாற்று சமூகத்தினா் எதிா்ப்பு தெரிவிப்பதால், 3 கி.மீ. தொலைவுக்கு மாணவா்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளதாகவும், பாதையை மீட்டுத் தர வேண்டும் எனவும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தன... மேலும் பார்க்க

அடிப்படை வசதி கோரி கிராம மக்கள் மனு

திண்டுக்கல்லை அடுத்து பொன்னுமாந்துறை ஊராட்சிக்குள்பட்ட காமாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.இதுதொடா்பாக அந்தப் பகுதி மக்கள் கூறியதாவ... மேலும் பார்க்க