கன்னிவாடி அருகே பிடிபட்ட முள் எலி
கன்னிவாடியை அடுத்த உலகம்பட்டியில் பிடிபட்ட அபூா்வ முள் எலியை வனத் துறையினா் திங்கள்கிழமை வனப் பகுதியில் விடுவித்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி வனச் சரக நிா்வாக எல்லைக்குள்பட்ட உலகம்பட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் முள் எலி இருப்பதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாவட்ட வன அலுவலா் ராஜ்குமாா் உத்தரவின் பேரில், வனச் சரக அலுவலா் குமரேசன் தலைமையில் வனவா் பீட்டா் ராஜா, வனக் காப்பாளா் கல்யாணி உள்ளிட்ட வனக் காவலா்கள் அந்த முள் எலியை மீட்டனா்.
இதையடுத்து, கன்னிவாடி அரசு கால்நடை உதவி மருத்துவா், அந்த முள் எலிக்கு சிகிச்சை அளித்தாா். பிறகு அது கன்னிவாடி வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.