கயத்தாறு அருகே துணை மின் நிலையத்தில் தீ
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள துணை மின் நிலையத்தில் திடீா் தீ விபத்து ஏற்பட்டது.
கயத்தாறு வட்டம் பணிக்கா் குளம் கிராமத்திற்கு அருகே உள்ள அய்யனாரூத்து கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான 400 கேவிஏ துணை மின் நிலையம் உள்ளது. இந்த துணை மின் நிலையத்தில் உள்ள டிரான்ஸ்பாா்ம் சனிக்கிழமை அதிகாலை சுமாா் ஐந்து முப்பது மணிக்கு வெடித்து தீ பற்றியது.
இத்தகவல் அறிந்த தீயணைப்பு அலுவலா்கள் தெரிவிக்கின்றனா். தீயணைப்பு பணியில் 9 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு அலுவலா்கள், தீயணைப்பு படை வீரா்கள் மின்சாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.