செய்திகள் :

கரடியின் ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

post image

மும்பை: கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனா மீதான அமெரிக்க அதிபர் விதித்த கட்டணங்களால் உலகளாவிய வர்த்தகப் போர் குறித்த அச்சங்களை மீண்டும் எழும்பியதால், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று சரிந்து முடிந்தது.

முதலீட்டாளர்கள் பார்வையானது தற்போது, பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை அறிவிப்பின் மீது உள்ள நிலையில், மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் பங்குகள் தலா 1 சதவிகிதமும் அதே வேளையில் ஸ்மால்கேப் பங்குகள் தலா 1.8 சதவிகிதம் உயர்ந்தது.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 731.91 புள்ளிகள் சரிந்து 76,774.05 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 243 புள்ளிகள் சரிந்து 23,239.15 புள்ளிகளாக வர்த்தகமானது. அதே வேளையில், வர்த்தகநேர முடிவில், சென்செக்ஸ் 319 புள்ளிகள் குறைந்து 77,187 ஆகவும் நிஃப்டி 121 புள்ளிகள் சரிந்து 23,361 ஆகவும் முடிந்தது.

இன்று 2,928 பங்குகள் வர்த்ககமான நிலையில், 787 பங்குகள் உயர்ந்தும் 2,063 பங்குகள் சரிந்தும் 78 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.

பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ ஆகிய இரண்டு குறியீடுகளும் கடந்த செப்டம்பர் 27ல் முதல் அவற்றின் சாதனை உச்சத்தை விட கிட்டத்தட்ட 10 சதவிகிதம் சரிந்து வர்த்தகம் ஆனது.

இன்று நால்கோ, வேதாந்தா, ஜிண்டால் ஸ்டெயின்லெஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் தலா 4 முதல் 6 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.

பட்ஜெட்டில், எண்ணெய் நிறுவனங்களுக்கான சந்தைப்படுத்தல் குறித்த குறைவான மீட்டெடுப்புகளை ஈடுசெய்ய ஏற்பாடுகள் இல்லாததால், முதலீட்டாளர்கள் எதிர்வினையாற்றியதால் இந்துஸ்தான் பெட்ரோலியம் 6 சதவிகிதமும், பாரத் பெட்ரோலியம் 4 சதவிகிதமும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் கிட்டத்தட்ட 4 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.

பிஎஸ்இ-யில் டாப் 30 பங்குகள் கொண்ட ப்ளூ-சிப் பேக்கிலிருந்து லார்சன் அண்ட் டூப்ரோ, என்டிபிசி, டாடா ஸ்டீல், பவர் கிரிட், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும் டைட்டன், மாருதி, நெஸ்லே, பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் வர்த்தகமானது.

ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ, ஹாங்காங் உள்ளிட்டவை சரிந்து முடிந்தது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் சனிக்கிழமையன்று ரூ.1,327.09 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.70 சதவிகிதம் வரை உயர்ந்து பீப்பாய்க்கு 76.20 அமெரிக்க டாலராக உள்ளது.

வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 87.29 ஆகக் குறைந்துள்ளது.டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் குறைந்து வருகிறது. அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற ... மேலும் பார்க்க

கடும் சரிவில் பங்குச்சந்தை! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!

வாரத்தின் முதல் நாளான இன்று(பிப். 3) பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமானது.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,063.94 என்ற புள்ளிகளில் தொடங்கியது.காலை 11.43 மணியளவில் சென்செக்ஸ் 5... மேலும் பார்க்க

ரூ. 2 முதல் 12 லட்சம் வரை: 2014 - 2025 மோடி அரசு செய்த தனிநபர் வரிவிலக்கு!

2025 - 26 மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமானவரி விலக்கு பெறுவதற்கான உச்சவரம்பு ரூ. 7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது மாதம் ரூ. 1 லட்சம் அல்லது ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை ஊதி... மேலும் பார்க்க

பட்ஜெட் தாக்கல்: ஏற்றத்துடன் நிறைவடைந்த பங்குச்சந்தை!

பங்குச்சந்தைகள் இன்று(பிப். 1) ஏற்றத்துடன் நிறைவு பெற்றுள்ளன. 2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை வணிகம் இன்று நடைபெற்றது.மும்பை பங்குச... மேலும் பார்க்க

பட்ஜெட் எதிரொலி: ரூ. 62,000-யைக் கடந்த தங்கம் விலை!

மத்திய பட்ஜெட் எதிரொலியாக ஒரேநாளில் 2-வது முறையாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. கடந்த ஜன. 22 ஆம் தேதி ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.6... மேலும் பார்க்க

ஏற்றத்தில் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்ந்தது!

2025-26 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று(பிப். 1) தாக்கல் செய்யப்படவிருப்பதால் பங்குச் சந்தை இன்று செயல்படுகின்றன. அதன்படி, பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன. மும்பை... மேலும் பார்க்க