செய்திகள் :

'கருணாநிதியின் இறுதி மூச்சில் கொடுத்த வாக்குறுதி' - ஸ்டாலினுக்கு வைகோ கொடுத்த மெசேஜ்

post image

கோவை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “2026 தேர்தலில் எங்கள் கூட்டணி பிரமாண்ட வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். இங்கு கூட்டணி அரசுக்கு வேலை இருக்காது.

வைகோ

டாக்டர் கலைஞரின் இறுதி மூச்சு பிரியும்போது, ‘உங்களுக்கு எப்படி 30 ஆண்டுகள் உறுதுணையாக இருந்தேனோ.. அதை போல ஸ்டாலினுக்கும் துணை நிற்பேன்.’ என்று கூறினேன். அப்போது கலைஞர் என் கையை பிடித்து கொண்டார்.

அவரின் கண்களில் கண்ணீர் கசிந்தது. அவர் மரணப்படுக்கையில் இருந்தபோது கொடுத்த வாக்குறுதியை நான் கடைசிவரை உறுதியாக காப்பாற்றுவேன். அந்த முடிவைத்தான் நிர்வாக குழுவிலும் எடுத்துள்ளோம். திமுகவுக்கு வெற்றியை தேடித்தர மதிமுக முழு மூச்சுடன் பணியாற்றும். இந்த அரசுக்கு எதிராக நாங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதில்லை.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அறிக்கை கூட விட்டதில்லை. சிறப்பான திராவிட மாடல் ஆட்சியை வழங்கி கொண்டிருக்கிறார்கள். இலவச பேருந்து, மகளிர் உரிமைத் தொகை, இளைஞர்களுக்கு என்று பல திட்டங்கள் நிறைவேற்றியுள்ளனர்.

திமுக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை!

பாஜக – அதிமுக கூட்டணியில் அடுத்து யார் சேர்வார்கள் என்று பேச்சு எழுந்துள்ளது. திமுக கூட்டணியில் எந்தப் பிரச்னையும் இல்லை. எல்லோரும் மிகவும் உறுதியாக இருக்கின்றனர். திருப்புவனம் இளைஞர் மீது எந்த குற்ற பின்னணியும் இல்லை. காவல்துறை அவரை அடித்து, உதைத்து சித்திரவதை செய்து சாகடித்துள்ளனர்.

திருப்புவனம் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த இளைஞர்

அரசு உடனடியாக 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை உயர் நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் நடைபெற வேண்டும். அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.” என்றார்.

'பாஜக கூட்டணி இல்லை என்றனர்; இப்போது மிக்சர் சாப்பிடுகின்றனர்' - அதிமுக குறித்து செந்தில் பாலாஜி

திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கோவை கொடிசியா பகுதியில் உள்ள தன் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “நம் முதலமைச்சர் ஆளுமை மிக்க முதலமைச்சராக இருக்கிறார். கோவை ம... மேலும் பார்க்க

`மகாராஷ்டிரா பள்ளிகளில் இந்தி திணிப்பு வாபஸ்'-வெற்றிக்கூட்டத்தில் பங்கேற்கும் தாக்கரே சகோதரர்கள்!

மகாராஷ்டிராவில் உள்ள பள்ளிகளில் 1-5வது வகுப்பு வரை இந்தி கட்டாயமாக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பு மராத்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதோடு உத்தவ் தா... மேலும் பார்க்க

சித்தராமையா Vs DK சிவக்குமார்: கர்நாடகா முதலமைச்சர் பதவி மோதல்; என்ன நடக்கிறது கர்நாடகா காங்கிரஸில்?

'அடுத்த முதலமைச்சர் யார்?'- இந்தக் கேள்வி தான், தற்போது கர்நாடகாவில் மையம் கொண்டுள்ளது. 'இதில் என்ன பிரமாதம் அங்கே தேர்தலாக நடக்கவிருக்கலாம்!' என்று கடந்துவிடாதீர்கள். கர்நாடகாவின் சட்டமன்ற தேர்தல் 20... மேலும் பார்க்க

`தமிழ்நாடு இரண்டாந்தர மாநிலமாக போகக்கூடாது; ஒரே குடையின்கீழ் ஒன்றிணைவதே நம் இலக்கு’ - துரைமுருகன்

வேலூரில் இன்று, தி.மு.க பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், மாவட்டச் செயலாளரும் அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ-வுமான ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். துரைமுருகன் ப... மேலும் பார்க்க

'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் - மஸ்க் மோதல்!

'ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்' - இந்தப் பெயரை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உச்சரித்ததில் இருந்து தான், அவருக்கும், அவரது உற்ற நண்பன் எலான் மஸ்கிற்கு வாய்க்கால் வரப்பு தகராறு தொடங்கியது. இந்தப் பில்-ல... மேலும் பார்க்க

அஜித்குமார் லாக்கப் மரணம்: "முதல்வருக்குத் தெரியாமலா இதெல்லாம் நடந்திருக்கும்?" - தவெக கேள்வி

சிவகங்கை அஜித்குமார் லாக்கப் மரணம் விவகாரம் - தவெக பத்திரிகையாளர் சந்திப்புசிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்திருக்கும் அஜித்குமார் என்ற இளைஞரின் காவல்நிலைய மரணம் தொடர்பாக விஜய்யின் தமிழக வெற்றிக... மேலும் பார்க்க