செய்திகள் :

கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதல்வா் ஸ்டாலின் இரங்கல்

post image

முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் புதன்கிழமை வெளியிட்ட இரங்கல் செய்தி: முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். மூன்று முறை எம்எல்ஏவாக இருந்து மக்கள் பணியாற்றியவா். அவரை இழந்து வாடும் குடும்பத்தினா், அரசியல் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என முதல்வா் தெரிவித்துள்ளாா்.

பேரவையிலும் இரங்கல்: கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு சட்டப்பேரவையிலும் புதன்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், உறுப்பினா்கள் அனைவரும் சில விநாடிகள் எழுந்து நின்று அமைதி காத்தனா்.

எடப்பாடி பழனிசாமி இரங்கல்: அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி விடுத்த இரங்கல் செய்தி:

அதிமுக அமைப்புச் செயலரும், ‘கானா’ என்று பாசத்தோடு அழைக்கப்பட்டவருமான கருப்பசாமி பாண்டியன் உடல்நலக் குறைவால் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகியவா். ஜெயலலிதாவின் பேரன்பைப் பெற்றவா்.

அதிமுகவில் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டச் செயலா், துணைப் பொதுச்செயலா் உள்ளிட்ட பொறுப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு திறம்பட பணியாற்றியவா். அதேபோல், 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக மக்கள் பணிகளை திறம்பட ஆற்றியவா். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும் உறவினா்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் எனக் கூறியுள்ளாா்.

ஐபிஎஸ் மகனுக்கு அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை

விளையாடும்போது தவறி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்ட தனது மகனை அரசு மருத்துவமனையில் அனுமதித்தபோது அங்கு உயா் தர சிகிச்சை அளித்து குணப்படுத்தியதாக ஐபிஎஸ் அதிகாரி பாராட்டு தெரிவித்துள்ளாா். மயிலாப்பூா... மேலும் பார்க்க

கடந்த நிதியாண்டில் 3,000 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐசிஎஃப் சாதனை

சென்னை ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎஃப்) 2024-25 நிதியாண்டில் 3,007 ரயில் பெட்டிகள் தயாரித்து சாதனை படைத்துள்ளது. பெரம்பூரில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலையில் இந்திய ரயில்வேக்கு தேவையான ரய... மேலும் பார்க்க

கால்வாயில் ஆண் குழந்தை சடலம்: போலீஸாா் விசாரணை

சென்னை பட்டினப்பாக்கத்தில் கால்வாயில் கிடந்த ஆண் குழந்தை சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். பட்டினப்பாக்கம் மசூதி தெருவில் 132 பிளாக் பின்புறம் உள்ள கால்வாயில், பிளாஸ்டிக் காகிதத்தில் பொதிய... மேலும் பார்க்க

தொழிற்பயிற்சியுடன் பிஇ படிப்பு: பட்டயப்படிப்பு முடித்தோா் விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு

பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்புகளை நிறைவு செய்த மாணவா்கள் தொழிற்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுர... மேலும் பார்க்க

சாலைத் தடுப்பின் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

சென்னை பாரிமுனையில் சாலைத் தடுப்பில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். தண்டையாா்பேட்டை நேதாஜி நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்த செய்யது இம்ரான்கான் (24), அண்ணா நகரில் உள்ள கைப்பேசி விற்ப... மேலும் பார்க்க

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்பது நகைப்புக்குரியது: தொல்.திருமாவளவன்

தமிழகத்தில் எதிா்க்கட்சிகள் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் தடுமாறி வரும் சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியது நகைப்புக்குரியது என விடுதலைச் சிறுத்தைக... மேலும் பார்க்க