செய்திகள் :

கருப்புப் பணத்தை கொண்டுவருவோம் என்றவர்கள் வாட்ஸ்ஆப்-ஐ கண்காணிப்பது ஏன்? காங்கிரஸ்

post image

வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கருப்புப் பணத்தைக் கொண்டுவருவோம் என்ற கோஷத்தோடு ஆட்சிக்கு வந்தவர்கள் வாட்ஸ்ஆப் சாட்களை கண்காணிக்க விரும்புகிறார்கள் என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

நாட்டில் உள்ள தனிநபர்களின் வாட்ஸ்அப் சாட்கள் மூலம் ரூ.200 கோடி வரி ஏய்ப்புக் கண்டறியப்பட்டதாக வருமான வரி மசோதா மீது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்த நிலையில், அதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் கண்டனத்தில், இந்த சர்வாதிகார ஆட்சி தொடங்கும்போது 'வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை நம் நாட்டுக்குக் கொண்டு வருவோம்' என்ற முழக்கத்தை முன் வைத்திருந்தனர் என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை பிரதமர் மோடி ஒவ்வொரு பைசாவையும் திரும்பக் கொண்டுவருவார் என்றே பாஜகவினர் கூறினார்கள்.

ஆனால், இப்போதோ, அதே நபர்கள்தான், உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் நெருங்கியவர்களுக்கும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், நீங்கள் எங்கு இருக்கிறீர்கள், எங்கெல்லாம் செல்கிறீர்கள் என்பதைக் கண்காணிக்க விரும்புகிறார்கள் என்று சொல்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் உங்களை எப்படியெல்லாம் கட்டுப்படுத்த விரும்புகிறார்களோ, அந்த விதத்தில் எல்லாம் உங்களைக் கட்டுப்படுத்த முடியுமே தவிர, இதற்கும் வரி ஏய்ப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று காங்கிரஸ் காட்டமாகக் கூறியிருக்கிறது.

எனவே, மக்களாகிய நீங்கள் விரைவில் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர்களை வீட்டுக்கு அனுப்பினால்தான் உங்களுக்கு நல்லது நடக்கும். இதைப் பற்றி தீவிரமாக சிந்தித்துப் பாருங்கள் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க

இந்தியா முழுவதும் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பு!

இந்தியா முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 13,000 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியா முழுக்க 7,506.48 சதுர கி.மீ. காடுகள் ஆக்கிரமிப்பி... மேலும் பார்க்க

அம்பானியின் மகன் இஸட் பிரிவு பாதுகாப்புடன் 5-ஆவது நாளாக நடைப்பயணம்! எதற்காக?

புது தில்லி: இந்தியாவின் கோடீஸ்வர தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி இஸட் பிரிவு பாதுகாப்புடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தமது 30-ஆவது பிறந்தநாளை வரும் ஏப். 10-ஆம் தேதி கொண்டாடுவ... மேலும் பார்க்க

எஸ்பிஐ வங்கி ஏடிஎம் உள்ளிட்ட சேவையில் சிக்கல்..

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், ஏப். 1ஆம் தேதி காலையில் இருந்து பகல் வரை பணப்பரிமாற்றம் உள்ளிட்ட சில சேவைகளில் சிக்கலை சந்தித்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன.மொபைல் வங்கி, ஏட... மேலும் பார்க்க

நான் ஒரு யோகி.. அரசியல் முழு நேர வேலையல்ல.. சொன்ன முதல்வர் யார்?

புது தில்லி: தன்னுடைய முதல் அடையாளம் யோகி என்றும், தனது கடமை, உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவையாற்றுவது என்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.நான் ஒரு யோகி என்றும், அரசியல் எனக்கு முழு நேர வே... மேலும் பார்க்க