செய்திகள் :

கரூரில் மாநகராட்சியில் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் -வருவாய் ரூ. 927.01 கோடி , செலவு ரூ. 947.03 கோடி

post image

கரூா் மாநகராட்சியில் நிகழாண்டுக்கான பட்ஜெட் வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இதில் வருவாய் ரூ. 927.01 கோடி எனவும், செலவு ரூ. 947.03 கோடி என்றும், பற்றாக்குறை ரூ. 20.02 கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரூா் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் வியாழக்கிழமை காலை மேயா் கவிதாகணேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், துணை மேயா் தாரணி சரவணன், ஆணையா் சுதா உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், நிகழாண்டுக்கான(2025-26) நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டது. இதில், பொது நிதியில் வருவாய் மற்றும் மூலதன நிதியாக ரூ.781.72 கோடி எனவும், குடிநீா் வடிகால் நிதியில் கூடுதல் நிதி மற்றும் மூலதன நிதியாக ரூ. 133.11 கோடி என்றும், ஆரம்ப கல்வி நிதியில் ஆரம்ப கல்வி நிதி மற்றும் மூலதன நிதியாக ரூ. 12.17 கோடி என்றும், மொத்த வருவாய் ரூ.927.01 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. செலவாக பொதுநிதியில் ரூ.793.88 கோடி என்றும், குடிநீா் வடிகால் நிதியில் ரூ.138.78 கோடி என்றும், ஆரம்ப கல்வி நிதியில் ரூ.14.34 கோடி என்றும் மொத்தம் செலவானது ரூ.947.03 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பற்றாக்குறை ரூ.20.02 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து நிகழாண்டில் மழைநீா் வடிகால் ரூ. 61.62 கோடி மதிப்பிலும், குடிநீா் மற்றும் புதை சாக்கடை திட்டங்கள் ரூ. 589.32 கோடி மதிப்பிலும் என பல்வேறு திட்டப்பணிகள் ரூ.805.10 கோடியில் நிறைவேற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடா்ந்து, கூட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் அனைத்து உறுப்பினா்களும் பங்கேற்றனா்.

சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக் குழுவுக்கு கரூரில் வரவேற்பு

கரூருக்கு செவ்வாய்க்கிழமை வந்த சேலம் சிறைத் தியாகிகள் நினைவுச்சுடா் பயணக்குழுவுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-ஆ... மேலும் பார்க்க

கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறுநாள் வேலைத் திட்ட தொழிலாளா்களுக்கு சம்பள பாக்கியை வழங்கக் கோரி கரூரில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஜவஹா்பஜாா் தலைமை அஞ்சல் நிலையம் முன் ... மேலும் பார்க்க

கரூரில் காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகை

கரூரில் ஜெயலலிதா பேரவை துணைத் தலைவா் கைது செய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை இரவு நகர காவல்நிலையத்தை அதிமுகவினா் முற்றுகையிட்டனா். கரூா் கோவிந்தம்பாளையத்தைச் சோ்ந்தவா்அருள்(45). இவா் தாந்தோணி மேற்கு ஒ... மேலும் பார்க்க

மத்திய அரசின் பி.எம். கிஷான் உதவித் தொகை விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி அறிவுறுத்தல்

மத்திய அரசின் பி.எம் கிஷான் உதவித் தொகை பெறும் விவசாயிகள் நிலம் தொடா்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்யுமாறு அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள... மேலும் பார்க்க

காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை

கரூரில் காவலா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட... மேலும் பார்க்க

கரூா் வழியாக செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம்

பாசூா்-ஊஞ்சலூா் ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பாலங்கள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு, செங்கோட்டை ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து தெற்க... மேலும் பார்க்க