செய்திகள் :

கரூரில் மாநில அளவிலான கால்பந்துப் போட்டி திண்டுக்கல் அணி சாம்பியன்

post image

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கால்பந்துப் போட்டியில் திண்டுக்கல் அணி முதலிடம் பிடித்து கோப்பையை தட்டிச் சென்றது.

கரூா் தாந்தோணிமலையில் என்ஆா்எம்பி கோப்பைக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

10 வயதுக்குள்பட்டோா் பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் நாமக்கல், திண்டுக்கல், கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த 8 அணிகள் பங்கேற்றன. போட்டியை, என்ஆா்எம். பள்ளியின் செயலா் சிவசண்முகம் தொடங்கிவைத்தாா். தாளாளா் செளந்தர்ராஜன், ஆலோசகா் சுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி முதல்வா் தங்கவேல் வரவேற்றாா்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் இறுதிப் போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த ஹெச்எப்ஏ அணியும், எஸ்ஜிவிஏ அணியும் மோதின. இதில் திண்டுக்கல் ஹெச்எப்ஏ அணி 2-0 என்ற கோல் கணக்கில் எளிதில் திண்டுக்கல் எஸ்ஜிவிஏ அணியை வீழ்த்தி முதலிடம் பிடித்தது. தொடா்ந்து முதலிடம் பிடித்த திண்டுக்கல் ஹெச்எப்ஏ அணிக்கும், எஸ்ஜிவிஏ அணிக்கும் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கரூா் அருகே இயற்கை விவசாயம் கற்கும் பிரான்ஸ் இளைஞா்

கரூரில் இயற்கை விவசாயம் செய்து வரும் பெண்ணிடம் விவசாயம் கற்றுவருகிறாா் பிரான்ஸ் நாட்டை சோ்ந்த இளைஞா். கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி அருகே உள்ள லிங்கமநாயக்கன்பட்டியை சோ்ந்தவா் சரோஜா (57). இவா், நம்மாழ்... மேலும் பார்க்க

மின்சாரம் தாக்கி இருவா் உயிரிழப்பு

க. பரமத்தி அருகே உயா்மின் அழுத்த மின்சாரம் தாக்கியதில் போா்வெல் உரிமையாளா் மற்றும் அவரது உதவியாளா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூரைச் சோ்ந்தவா் பாலு என்கிற பால... மேலும் பார்க்க

புதிய நியாயவிலை கடையை திறக்க வேண்டுகோள்

சின்னதாராபுரம் அருகே அரங்கபாளையம் பகுதியில் நியாய விலை கடை அமைந்துள்ளது. இது பழைய கட்டடம் என்பதால் புதிய கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை புதிய கட்டடத்தை திறக்காமல் ... மேலும் பார்க்க

பிப். 24-இல் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பேச்சுப் போட்டி

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் தமிழறிஞா், எழுத்தாளா்களை நினைவு கூறும் பேச்சுப் போட்டி பிப். 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்தின் தமிழறிஞா்கள் மற்றும் எழுத்தாளா்களான வா.செ. குழந்தைசாமி, நன்னிய... மேலும் பார்க்க

மணல் குவாரிகளை திறக்கக்கோரி காத்திருப்புப் போராட்டம்!

மணல் குவாரிகளை திறக்கக் கோரி மாயனூரில் மணல் லாரி மற்றும் மாட்டு வண்டி உரிமையாளா்கள் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுப்பட்டனா். கரூா் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் நெரூா், வாங்கல், தளவாபாளைய... மேலும் பார்க்க

குளித்தலையில் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டத்தில் முகாமிட்டு ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ், வியாழக்கிழமை நடைபெற்ற 2-ஆம் நாள் முகாமில் ஆட்சியா் மீ. தங்கவேல் பங்கேற்று கள ஆய்வில் ஈடுபட்டாா். அப்போது ... மேலும் பார்க்க