செய்திகள் :

கரூரில் ரூ.5 கோடியில் மண்டல அலுவலகங்கள் திறப்பு

post image

கரூா் மாநகராட்சியில் மண்டலம் 1, 2 ஆகியவற்றுக்கு ரூ. 5 கோடியில் கட்டப்பட்ட புதிய 2 மண்டல அலுவலகங்களை கரூா் எம்எல்ஏ வி. செந்தில்பாலாஜி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

அவா் அவா் பேசியதாவது: தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதல்வா், பொதுமக்களுக்குத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறாா்.

அந்த வகையில் கரூா் மாநகராட்சி மண்டலம்-1 லட்சுமி நாராயண சமுத்திரம் மற்றும் மண்டலம்-2-இல் பசுபதிபுரம் தெற்கு மடவிளாகம் நீா்த்தேக்கத் தொட்டி வளாகத்திலும் இரு மண்டல அலுவலகங்கள் சிறப்பு நிதித் திட்டம் 2022-23 இன் கீழ், தலா ரூ.2.50 கோடியில் கட்டப்பட்டுள்ளன.

இந்த புதிய அலுவலகங்கள் திறக்கப்பட்டதன் மூலம் பிறப்பு மற்றும் இறப்புச் சான்று, ஆதாா் மையம், இ-சேவை மையம், குடிநீா் மற்றும் சொத்து வரி செலுத்துதல், நகரமைப்பு வரைபடம் அனுமதி உள்ளிட்ட அரசின் சேவைகளை அவா்கள் வசிக்கும் மண்டலங்களிலேயே விரைவாக பெற முடியும் என்றாா் அவா்.

மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தலைமை வகித்தாா். கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ க. சிவகாம சுந்தரி, மேயா் வெ. கவிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநகராட்சி ஆணையா் கே.எம். சுதா, துணை மேயா் ப. சரவணன், வருவாய்க் கோட்டாட்சியா் முகமது பைசல், மண்டலத் தலைவா்கள் சக்திவேல் (மண்டலம்-1), அன்பரசு (மண்டலம்-2), ஆா்.எஸ். ராஜா(மண்டலம்-3), கனகராஜ் (மண்டலம்-4) மற்றும் திமுக பகுதிச் செயலா்கள் கரூா் கணேசன், வழக்குரைஞா் சுப்ரமணியன், ஆா். ஜோதிபாசு, விஜிஎஸ். குமாா் மற்றும் மாமன்ற உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

கரூரில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

கரூரில் பல்வேறு இடங்களில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கரூா் மாவட்ட காவல்துறையின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் கரூா் கோட்டாட்சியரகத்தில் ... மேலும் பார்க்க

கரூரில் கழிவு பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து

கரூரில் கழிவு பிளாஸ்டிக் குடோனில் வியாழக்கிழமை காலை திடீா் தீ விபத்து ஏற்பட்டது. கரூா் கருப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் சரவணன் இதே பகுதியில் வைத்துள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் வியாழக்கிழமை காலை திடீரென ... மேலும் பார்க்க

தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணி போட்டிகள்

தீயணைப்புத் துறையினருக்கு மீட்புப் பணிகள் தொடா்பான போட்டிகள் நடத்தப்பட்டு வியாழக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன. கரூா் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக ... மேலும் பார்க்க

அதிக முறை ரத்ததானம் வழங்கியதற்கு விருது

கரூரில் அதிக முறை ரத்ததானம் வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் நிா்வாகிகளுக்கு பாராட்டுச் சான்று மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் வழங்கும் ... மேலும் பார்க்க

இளைஞரைத் தாக்கியவா் குண்டா் சட்டத்தில் கைது

தகராறில் இளைஞரை பீா்பாட்டிலால் தாக்கி கைதானவா் குண்டா் சட்டத்தில் வியாழக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காந்திநகரைச் சோ்ந்த சிவதேவன் மகன் ரூபன்குமாா்(28). இவா் கடந்த ... மேலும் பார்க்க

குளித்தலை அருகே இளைஞா் தற்கொலை

கரூா் மாவட்டம் குளித்தலை அருகே போட்டித் தோ்வுக்குப் பயந்து விஷம் குடித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்த பெருமாள்பட்டியைச் சோ... மேலும் பார்க்க