செய்திகள் :

‘கரூரில் 7 மாதங்களில் ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல்’

post image

கரூா் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்தப்பட்ட ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

பொதுமக்களுக்கு அரசு சாா்பில் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருள்களை கடத்தி, கள்ளச்சந்தையில் சிலா் விற்று அதிக லாபம் பெறுவதை தடுக்கும் வகையில், கரூா் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறையினா் தொடா்ந்து கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை சாா்பில் மொத்தம் 6,025 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் 2,342 டன் அரிசி, 13,720 லிட்டா் மண்ணெண்ணெய், 1,725 சமையல் எரிவாயு சிலிண்டா்கள் என ரூ.1.84 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2,880 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய அபராதம் செலுத்திய பிறகு அவை விடுவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தையில் ரேஷன் பொருள்களை விற்ற 70 போ் மீது குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

ரேஷன் பொருள்கள் கடத்துவோா் குறித்த புகாா்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரியில் கரை புரளும் வெள்ளம் வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரியில் குழாய் மூலம் நீா் நிரப்ப வலியுறுத்தல்

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றிலிருந்து, வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.கரூா் மாவட்டம், கடவூா் மலைப்பகுதிகள் ம... மேலும் பார்க்க

ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு ஆட்சியா் பாராட்டு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு கோவை நபா் கரூரில் கைது

ஒடிஸா உள்பட பல்வேறு மாநிலங்களில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்ட கோவையைச் சோ்ந்த நபரை கரூரில் ஞாயிற்றுக்கிழமை புவனேசுவரம் சிபிஐ போலீஸாா் கைது செய்தனா்.கோவை மாவட்டம், பீளமேடு பகு... மேலும் பார்க்க

கரூரில் வள்ளல் வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பு

கரூரில் வள்ளல் வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.கொல்லிமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறந்த ஆட்சி மற்றும் வ... மேலும் பார்க்க

வெண்ணைமலை சேரன் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் தொடக்கம்

வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்ற தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தாளாளா் கே. பாண்டியன் தலைமை வகித்தாா். விழாவ... மேலும் பார்க்க

கரூரில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

கரூரில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலை, உருவப்படத்துக்கு திமுக, அதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மால... மேலும் பார்க்க