செய்திகள் :

கரூர்: இரண்டு போக்சோ வழக்குகள் விசாரணை; ஒரே நாளில் அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்

post image

கரூர் மாவட்டம், ராயனூர் அருகே உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் கடந்த 2020 -ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 14-ம் தேதி ஒரு சிறுமியை கடத்தி, பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கரூர் கூடுதல் அமர்வு மகிலா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தான்தோன்றிமலை வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்த நிஷாந்த் (வயது: 24), குறிஞ்சி நகர் அரவிந்த் (வயது: 24), திருக்காம்புலியூர் வசந்த் என்கிற வசந்தகுமார் (வயது: 24) பெருமாள்பட்டி காலனி பகுதியைச் சேர்ந்த கலைவாணன் (வயது: 29), மருதம்பட்டி காலனி கோகுல்நாத் (வயது: 24), வையாபுரி நகர் பார்த்திபன் (வயது: 31) ஆகிய ஆறு பேர் கூட்டாக சேர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, குற்றபத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்து விசாரணை நடைபெற்று முடிந்தது.

accused

இந்நிலையில், மாவட்ட கூடுதல் அமர்வு மகிலாநீதிமன்ற நீதிபதி தங்கவேல் தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிஷாந்த் மற்றும் அரவிந்த் ஆகியோருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும், வசந்த் என்கிற வசந்தகுமார், கலைவாணன், கோகுல்நாத் மற்றும் பார்த்திபன் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 1000 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இதே போல, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம், 19-ம் தேதி 16 வயது மதிக்கத்தக்க சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்தது தொடர்பாக, கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கரூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற அமர்வில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

accused

இந்நிலையில், அந்த வழக்கின் விசாரணையும் முடிவுக்கு வந்து, நீதிபதி தங்கவேல் இந்த வழக்கிலும் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூபாய் ஏழு லட்சம் நிவாரண தொகை வழங்கவும், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்துல் சமத் (வயது: 59) என்பவருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையம் வழங்கி கரூர் மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற அமர்வு நீதிபதி தங்கவேல் தீர்ப்பு வழங்கினார்.

accused

மேற்கண்ட இந்த இரண்டு வழக்குகளிலும் தொடர்புடைய குற்றவாளிகளை போலீஸார் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.

ஒரே நாளில் இரண்டு வழக்குகளிலும் நீதிபதி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது, கரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

திருச்சி: பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் இருவர் கைது; பின்னணி என்ன?

திருச்சி மாவட்டம், முசிறி பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு, 7-ம் வகுப்பு படிக்கும் சகோதரிகள் இருவர் பள்ளிக்கு வந்த நிலையில் மயங்கி உள்ளனர். இருவரையும் ஆசிரியர்கள் அதே பகுதியிலுள்ள அ... மேலும் பார்க்க

மொட்டைமாடியில் கஞ்சா வளர்த்த மத்திய அரசு அதிகாரி; தென்னையில் கள் இறக்கும் தொழிலாளியால் சிக்கினார்!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத்துறை அலுவலகத்தில் அஸிஸ்டெண்ட் ஆடிட் ஆப்பிசராக ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெதின்(27) என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர் திருவனந்தபுரம் கம்லேஸ்... மேலும் பார்க்க

தூத்துக்குடி: மதுபோதையில் தகராறு; மருமகனைப் பாறாங்கல்லால் தாக்கி கொன்ற மாமனார்; என்ன நடந்தது?

தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர்- கீரைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார். இவரது மூத்த மகள் சங்கீதா. இவருக்கும் நாசரேத் கீழத்தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்க... மேலும் பார்க்க

மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர்; நாக்பூர் வரை ஃபாலோ செய்த போலீஸ்; இரு வாரத்திற்குப் பின் மீட்பு

கடந்த 6-ஆம் தேதியன்று கடத்தப்பட்ட பிரபல தொழிலதிபர் சுந்தரராமன் மதுரை காவல்துறையினரால் நேற்று மீட்கப்பட்டார். இந்த கடத்தலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகைது செய்ய... மேலும் பார்க்க

31 வருடங்களுக்குப் பிறகு தூசுதட்டப்பட்ட வழக்கு; 32 வயது இளைஞன் 63 வயதில் AI மூலம் சிக்கியது எப்படி?

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் நகரக் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 1994-ம் ஆண்டு கொலை வழக்கொன்று பதிவானது. அந்த வழக்கில் இரண்டுப் பேர் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் இர... மேலும் பார்க்க

சென்னை: ரூ.17 லட்சம், 4 செல்போன்கள் - மாப்பிள்ளை என அழைத்து ஏமாற்றிய மணமகளின் அப்பா!

சென்னை வில்லிவாக்கம் நியூ ஆவடி சாலையில் வசித்து வருபவர் ஜெயபிரகாஷ் (31). இவர் வில்லிவாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜெயபிரகாஷ், மணமகள் தேவை என் திருமண தக... மேலும் பார்க்க